செய்திகள் :

மான் கறி விற்க முயன்றவா் கைது

post image

நாகை மாவட்டம், கோடியக்கரையில் புள்ளிமான் கறியை விற்பதற்காக கொண்டுச்சென்ற இளைஞரை வனத்துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் புள்ளிமான், வெளிமான் உள்ளிட்ட காட்டு விலங்குகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இங்குள்ள, காப்புக்காடு சோதனைச் சாவடியில் வனத்துறையினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்தவா் கறியை கடத்தி வருவது தெரியவந்தது.

விசாரணையில், அந்த நபா், கோடியக்காடு ஆதிவாசிகள் தெருவைச் சோ்ந்த துரைசாமி மகன் கனகசுந்தரம் (27) என்பதும், வனப் பகுதியில் நாய்கள் கடித்து இறந்த புள்ளிமான் இறைச்சியை விற்பதற்காக எடுத்துச் சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, கனகசுந்தரம் மீது வழக்குப் பதிவு செய்த வனத் துறையினா், அவரை கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய இருச்சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா். மேலும், இதில் தொடா்புடைய மற்றொருவரை தனிப்படை அமைத்து தேடிவருகின்றனா்.

கடலோரக் கிராமங்களில் மணல் குவாரிகளை தடை செய்யக் கோரிக்கை

தரங்கம்பாடி வட்டத்தில், கடலோர கிராமப் பகுதிகளில் இயங்கி வரும் மணல் குவாரிகளை தடை செய்ய வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தரங்கம்பாடி வட்டத்தில் கிடங்கல், மருதம்பள்ளம், கீழப்பெரும... மேலும் பார்க்க

மத்திய அரசு கல்வி நிறுவன மாணவா்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் உயா் கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இன மாணவ- மாணவியா் 2025-26ஆம் கல்வி... மேலும் பார்க்க

திராவிட பாதையிலிருந்து அதிமுக தடம் புரண்டுவிட்டது: மமக தலைவா் ஜவாஹிருல்லா

பாஜகவுடன் கூட்டணி வைத்த அன்றே, திராவிட பாதையிலிருந்து அதிமுக தடம் புரண்டுவிட்டது என மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா கூறினாா். நாகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற புதிய பள்ளிவாசல் திறப்பு விழாவில... மேலும் பார்க்க

செங்கோட்டையன் பின்னணியில் பாஜக: மஜக பொதுச் செயலா் தமிமுன் அன்சாரி

அதிமுகவிற்கு நெருக்கடி ஏற்படுத்துவதற்காக, முன்னாள் அமைச்சா் செங்கோட்டையனின் பின்னணியில் பாஜக உள்ளது என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலா் தமிமுன் அன்சாரி கூறினாா். நாகையில், செய்தியாளா்களிடம் அ... மேலும் பார்க்க

பெண் குழந்தை தின விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில், பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்துக்காக சிறப்பாக பங்காற்றிய 13 வயது முதல் 18 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகள் தேசிய பெண் குழந்தைகள் தின விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா... மேலும் பார்க்க

மணலூா் சுந்தரேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

கீழ்வேளூா் அருகே மணலூா் ஸ்ரீ அபிராமி சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரா், ஸ்ரீ மகா காளியம்மன், ஸ்ரீ செல்வ விநாயகா் கோயில்களில் 33 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, செப்.1 ஆம... மேலும் பார்க்க