செய்திகள் :

மாமல்லபுரம் புறவழிச் சாலை மேம்பாலப் பணிகள் தீவிரம்

post image

பி. அமுதா

இசிஆா் சாலை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக மாமல்லபுரம் புறவழிச் சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் இருந்து புதுச்சேரி வரை உள்ள கிழக்கு கடற்கரை சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் ரூ.700 கோடி ஒதுக்கியது. தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிக்காக 5,434 ஏக்கா் அரசு புறம்போக்கு மற்றும் பட்டா நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு அதில் உள்ள கட்டடங்கள் இடிக்கப்பட்டன.

இதையடுத்து தனியாரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பட்டா நிலங்களுக்கு அரசு மூலம் நிா்ணயிக்கப்பட்ட உரிய இழப்பீடு உரிமையாளா்களுக்கு வழங்கப்பட்டது. மாமல்லபுரம், கல்பாக்கம், கடம்பாடி, குன்னத்தூா், மேல் பெருமாள்சேரி, கீழ் பெருமாள்சேரி, மணமை உள்ளிட்ட கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில், இழப்பீடு தொகை வழங்கப்பட்டு, சாலை பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

குறிப்பாக சாலை விரிவாக்கப் பணிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் சாலையின் இரு புறமும் உள்ள வாகை மரம், வேப்ப மரம், புங்கை மரம், கொன்றை மரம், வேப்ப மரம் உள்ளிட்ட வகைகளை சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட ராட்சத மரங்கள் மரம் அறுக்கும் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன.

இந்நிலையில் 4 வழிச்சாலையில், ஒரு பகுதியில் முதல் கட்டமாக இரு வழிச்சாலையில் மாமல்லபுரம் முதல் கடம்பாடி வரை ஒரு பகுதி சாலை பணிகள் முடிக்கப்பட்டு அப்பகுதியில் இரண்டு புறமும் செல்லும் வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

குறிப்பாக மாமல்லபுரம் புறவழிச்சாலை 4 முனை சந்திப்பில் புதுச்சேரி சென்னை செல்லும் வாகனங்கள் சிக்னலில் நிற்காமல் நேராக செல்லும் வகையில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

அதற்காக தற்போது மேம்பாலத்தின் இரண்டு புறங்களில் மணல் சரியாத வகையில் சிமென்ட் கான்கிரீட் தடுப்புகள் அமைக்கப்பட்டு, தற்போது மணல் நிரப்பும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மாமல்லபுரம் அருகில் உள்ள ஏரி, குளம் பகுதிகளில் இருந்து லாரி, லாரியாக மணல் கொண்டு வரப்பட்டு மேம்பாலம் உயரத்துக்கு ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் மணல் நிரப்பப்பட்டு வருகிறது.

இதற்காக ஆயிரக்கணக்கான மணல் லோடுகள்கொண்டு வரப்படும். பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருவதாகவும் சாலை மேம்பாட்டு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மே 30-இல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள்நலன் காக்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (மே 30) புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் அமாவாசை வேள்வி பூஜை

மதுராந்தகம்: மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் வைகாசி மாத அமாவாசை வேள்வி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் வைகாசி மாத அமாவாசை வேள்வி பூஜையை முன்னிட்... மேலும் பார்க்க

கோயில்களில் அமாவாசை சிறப்பு பூஜைகள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஜீவானந்தம் தெருவில் உள்ள அங்காளம்மன் கோயில் திங்கள்கிழமை அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை உற்சவ அம்மனுக்கு சிறப்பு ... மேலும் பார்க்க

செங்கல்பட்டு குறைதீா் கூட்டத்தில் 429 மனுக்கள் அளிப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் 429 மனுக்கள் பெறப்பட்டன. செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் தலை... மேலும் பார்க்க

நாளை பி.வி களத்தூரில் மனுநீதி நாள் முகாம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், பொன்விளைந்தகளத்தூா் குறுவட்டம். பொன்விளைந்த களத்தூரில் ஆட்சியா் தலைமையில் 28.05.2025 (புதன்கிழமை) காலை 10.00 மணிக்கு மனுநீதிநாள் முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் ... மேலும் பார்க்க

செய்யூரில் அரசு கலை, அறிவியல் கல்லூரி தொடக்கம்: முதல்வா் காணொலியில் திறந்து வைத்தாா்

மதுராந்தகம்: செய்யூா் தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி மூலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தொடங்கி வைத்தாா். செங்... மேலும் பார்க்க