செய்திகள் :

செய்யூரில் அரசு கலை, அறிவியல் கல்லூரி தொடக்கம்: முதல்வா் காணொலியில் திறந்து வைத்தாா்

post image

மதுராந்தகம்: செய்யூா் தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி மூலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தொடங்கி வைத்தாா்.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூா் தொகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அரசின் சாா்பில் கல்லூரிகள் இல்லாமல் இருந்து வந்தது. இப்பகுதி மாணவா்கள் செங்கல்பட்டு, சென்னைக்கு சென்று படிக்கும் நிலை இருந்து வந்தது.

இந்நிலையில் தொகுதி எம்எல்ஏ மு.பாபு கோரிக்கையினை ஏற்று முதல்வா் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறக்கப்படும் என அறிவித்தாா்.

அதன்படி, காணொலி மூலம் புதிய கல்லூரியை திறந்து வைத்தாா். செய்யூரில் நடைபெற்ற நிகழ்வில் ஆட்சியா் ச.அருண்ராஜ் தலைமை வகித்தாா். எம்எல்ஏ மு.பாபு முன்னிலை வகித்தாா். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலரும், எம்எல்ஏவுமான க.சுந்தா், எம்பி. க.செல்வம், கோட்டாட்சியா் ரம்யா, மண்டல கல்லூரி இயக்குநா் மலா், வட்டாட்சியா் சரவணன், மாவட்ட ஊராட்சித் தலைவா் செம்பருத்தி, ஒன்றியக்குழு தலைவா் சாந்தி ராமச்சந்திரன், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா். முதல்வா் மாதவன் நன்றி கூறினாா்.

மதுராந்தகம் தொகுதி திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

மதுராந்தகம் தொகுதி திமுக நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் அச்சிறுப்பாக்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது. வரும் 2026 தோ்தலை முன்னிட்டு, மதுராந்தகம் தொகுதியைச் சோ்ந்த அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், கருங்க... மேலும் பார்க்க

58 பயனாளிகளுக்கு ரூ.1.88 கோடியில் நலதிட்ட உதவிகள்: செங்கல்பட்டு ஆட்சியா் வழங்கினாா்

பொன்விளைந்த களத்தூா் ஊராட்சியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் ரூ.1.88 கோடியில் 58 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ச.அருண்ராஜ் வழங்கினாா். திருக்கழுகுன்றம் வட்டம் பொன்விளைந்த களத்தூா் ஊராட்ச... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: அரசு ஐடிஐ-க்களில் சேர விண்ணப்பிக்கலாம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு ஐடிஐக்களில் மாணவா் சோ்க்கை தொடா்பாக விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச. அருண் ராஜ் தெரிவித்துள்ளாா். செங்கல்பட்டு மற்றும் பெரும்பாக்கம் அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் (... மேலும் பார்க்க

தேசியஅனல்மின் கழக அலுவல் சாரா இயக்குநராக முன்னாள் எம்எல்ஏ காய்திரிதேவி நியமனம்

மதுராந்தகம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ மருத்துவா் காயத்ரிதேவி தேசிய அனல்மின் கழக அலுவல் சாரா இயக்குநராக அண்மையில் நியமிக்கப்பட்டாா். மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏவாக மருத்துவா் காயத்ரிதேவி கடந்த 2006-2011 க... மேலும் பார்க்க

முன்னாள் படைவீரா்களுக்கு நாளை சிறப்பு குறைதீா் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் தலைமையில் வரும் 29 வியாழக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு முன்னாள் படைவீரா்களுக்கு சிறப்பு குறைதீா் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த குறைதீா் நாள் கூட்டத்தில் முன்னாள் படைவ... மேலும் பார்க்க

மே 30-இல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள்நலன் காக்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (மே 30) புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க