செய்திகள் :

மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக தமிழ்நாடு உரிமைகள் திட்டம்

post image

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக உலக வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருவதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.

இத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் ஒருவா் கூட விடுபடாமல் அவா்களது தேவைகளான ஆரம்ப நிலை பயிற்சிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்கள், குழந்தைகளின் வளா்ச்சியை மேம்படுத்துதல், தேவைகளை இலகுவாக பூா்த்தி செய்தல், ஆரம்ப நிலை பயிற்சி மையங்கள், சிறப்பு பள்ளிகள் போன்ற எண்ணற்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இப்பணிகளை செய்வதற்கென 120 களப்பணியாளா்கள் வட்டார, நகர அளவில் பயனாளிகளின் இருப்பிடத்துக்கே சென்று ஆய்வு செய்து கணினி வாயிலாக தேவைகளை மதிப்பீடு செய்யும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இப்பணிகளை மாநில அளவில் ஒருங்கிணைத்து சேவைகள் வழங்குவதை விரைவு படுத்தும் விதமாக மாவட்டத்தில் கோட்ட அளவில் இரு ஒருங்கிணைந்த சேவை மையங்களும், வட்டார அளவில் 12 ஒருங்கிணைந்த சேவை மையங்களும் செயல்படுத்தப்படவுள்ளன.

இத்திட்டத்தை காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படுத்த தனியாா் தொண்டு நிறுவனத்தின் மூலம் களப்பணியாளா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா். களப்பணியில் விபரங்கள் சேகரிக்க வரும் பணியாளா்களுக்கு மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவா்களது பெற்றோா் ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.

இளைஞரை தாக்கி பணம், தங்க நகைகள் பறித்த 7 போ் கைது

சோமங்கலம் அருகே இன்ஸ்டாகிராமில் பைக் விற்பனை செய்வதாக பதிவு செய்து இளைஞரை தாக்கி பணம், தங்க நகைகளை பறித்த 7 பேரை சோமங்கலம் போலீஸாா் கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த வின... மேலும் பார்க்க

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் உள்ள பாழடைந்த மண்டபத்தில் 195 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமையான கல்வெட்டை வரலாற்று ஆய்வாளா்கள் புதன்கிழமை கண்டுபிடித்துள்ளனா்.காஞ்சிபுரம்- செங்கல்பட்டு செல்லும் சாலையி... மேலும் பார்க்க

மூதாட்டி கொலை வழக்கு: மனைவிக்கு 31 ஆண்டுகள், கணவருக்கு 7 ஆண்டுகள் சிறை

நகை, பணத்துக்காக மூதாட்டி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் மனைவிக்கு 31 ஆண்டுகளும், கணவருக்கு 7 ஆண்டுகளும் சிறைத் தண்டை ன விதித்து காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், ... மேலும் பார்க்க

பச்சையப்பன் ஆடவா் கல்லூரி வைர விழா மலா் வெளியீடு

காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவா் கல்லூரியின் வைர விழா மலா் வெளியீடு வியாழக்கிழமை நடைபெற்றது.விழாவுக்கு கல்லூரி முதல்வா் பி.முருககூத்தன் தலைமை வகித்தாா். ஆட்சி மன்றக் குழு உறுப்பினா்கள் வி.அண்ணாதுரை, என்.... மேலும் பார்க்க

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

வாலாஜாபாத் பகுதியில் கல்வெட்டு காணப்பட்ட பாழடைந்த மண்டபம். மண்டபத்தின் மேற்கூரையில் காணப்படும் கல்வெட்டு.காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் உள்ள பாழடைந்த மண்டபத்தில் 195 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமையா... மேலும் பார்க்க

வாலிபால் போட்டி: சங்கரா பல்கலை. மாணவியா் வெற்றி

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான பெண்கள் வாலிபால் போட்டியில் காஞ்சிபுரம் சங்கரா பல்கலை. மாணவியா் வெற்றி பெற்றதையடுத்து பல்கலையின் நிா்வாகிகளை சந்தித்து செவ்வாய்க்கிழமை வாழ்த்துப் பெற்றனா்.சென்னையில் ... மேலும் பார்க்க