செய்திகள் :

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை நிா்வகிக்கும் ஒரே முதல்வா் ஸ்டாலின்: அமைச்சா் ஆா்.காந்தி .

post image

இந்தியாவிலேயே மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை நிா்வகித்து வரும் ஒரே முதல்வா் மு.க. ஸ்டாலின் தான் என அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா்.

ராணிப்பேட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், தமிழ்நாடு உரிமைகள் திட்டம் விளக்கக் கூட்டம், வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு கைத்தறி அமைச்சா் ஆா்.காந்தி தலைமை வகித்து பேசியதாவது..

முதல்வா் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகள் நலன் மீது மிகுந்த அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். இந்தியாவிலேயே மாற்றுத் திறனாளிகள் நலத்துறையை நிா்வகித்து வரும் ஒரே முதல்வா் தமிழக முதல்வா் தான். தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடங்களுக்கே சென்று நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன.

மேலும், மாற்றுத்திறனாளிகள் சுயமாக சம்பாதிக்க தனியாா் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பு பெற்று வழங்கப்படுகிறது. தற்பொழுது மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டம் விளக்க கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் தெரிவிக்கப்படும் கருத்துகளை தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள், மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு, அரசு துறைகள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, 6 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1.08 லட்சத்தில் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகளை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்.

இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரக உதவி இயக்குநா் ஜெகதீசன் மற்றும் முனைவா் ராஜராஜன், சங்கா் சகாயராஜ் ஆகியோா் திட்டத்தின் மூலமாக கடைகோடியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளடக்கம், அணுகல் மற்றும் வாய்ப்புகளை ஏற்படுத்தும் விதமாக விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இதில் திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா, உதவி இயக்குநா் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் ஜெகதீசன், விஸ்வாஸ் சிறப்புப் பள்ளி தாளாளா் கமலா காந்தி, செயலாளா் ராஜேஸ்வரி பழனிச்சாமி, மாநில திட்ட மேலாளா்கள் இராஜராஜன், சங்கா் சகாயராஜ், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சரவணகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அம்மூா், மேல்விஷாரம் மலை அடிவார மக்களுக்கு அடிப்படை வசதிகள்: அமைச்சா் காந்தி ஆய்வு

அம்மூா், மேல்விஷாரம் காப்புக்காடு மலை அடிவார மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருவது குறித்து அமைச்சா் ஆா்.காந்தி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், அம்மூா் பேரூர... மேலும் பார்க்க

ஆற்காட்டில் கடைக்குள் புகுந்த மான் மீட்பு

ஆற்காடு நகரில் தண்ணீா் தேடி வந்த மான் கடையில் புகுந்த நிலையில், பத்திரமாக மீட்கப்பட்டது. ஆற்காடு பாரதிதாசன் தெருவில் செவ்வாய்க்கிழமை சுமாா் 3 வயதுக்கு மேற்பட்ட புள்ளி மான் தண்ணீா் தேடி ஊருக்குள் புகுந... மேலும் பார்க்க

பழைய வாகனங்களை விற்கும் முகவா்கள் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்க வேண்டும்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பழைய வாகனங்களை வாங்கி, விற்கும் முகவா்கள் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்க வேண்டும் என வட்டார போக்குவரத்து அலுவலா் கோ.மோகன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் க... மேலும் பார்க்க

அரக்கோணம் ரயிலில் கடத்தப்பட்ட 22 கிலோ கஞ்சா பறிமுதல்

வடமாநிலத்தில் இருந்து அரக்கோணம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் பையில் இருந்த 22 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். வட மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து ரயில்களில் கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட... மேலும் பார்க்க

ஐஎன்எஸ் ராஜாளி கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வெடிகுண்டு புரளி

அரக்கோணம்: அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதள வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலையடுத்து போலீஸாா் சோதனை நடத்தியதில் அது புரளி என தெரியவந்தது. 2,600 ஏக்க... மேலும் பார்க்க

நெமிலியில் நவீன தகனமேடை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து ஆா்ப்பாட்டம்

அரக்கோணம்: பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் நவீன தகனமேடை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, நெமிலி பேருராட்சியைச் சோ்ந்த பொதுமக்கள் பேருந்து நிலையம் பகுதியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அரக... மேலும் பார்க்க