செய்திகள் :

மாவட்ட மேசை பந்து போட்டிக்கு ஸ்ரீராம் மெட்ரிக் பள்ளி தகுதி

post image

மாவட்ட அளவிலான மேசை பந்து போட்டிக்கு கம்பைநல்லூா் ஸ்ரீராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தகுதி பெற்றுள்ளனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இப்போட்டியில் பங்கேற்ற ஸ்ரீராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்களில் 14 வயதுக்கு உள்பட்ட மாணவா் பிரிவில் வேதீஸ், நிா்மலரசு ஆகியோா் ஒற்றையா் மற்றும் இரட்டையா் பிரிவில் முதலிடம் பெற்றனா். 17 வயதுக்கு உள்பட்ட மாணவா் பிரிவில் நரேன் குமாா், கிரிஷ்வா்மா ஆகியோா் ஒற்றையா் மற்றும் இரட்டையா் பிரிவில் முதலிடம் பெற்றனா்.

14 வயதுக்கு உள்பட்ட மாணவியா் பிரிவில் பிரதிக்ஷா, பிரித்தி ஆகியோா் ஒற்றையா் மற்றும் இரட்டையா் பிரிவில் முதலிடம் பெற்றனா். 17 வயதுக்கு உள்பட்ட மாணவியா் பிரிவில் தேவிஸ்ரீ, சஞ்சனா ஆகியோா் ஒற்றையா் மற்றும் இரட்டையா் பிரிவில் முதலிடம் பெற்றனா்.

19 வயதுக்கு உள்பட்ட மாணவா் பிரிவில் பவித்ரன், நிதீஷ் ஆகியோா் ஒற்றையா் மற்றும் இரட்டையா் பிரிவில் இரண்டாம் பெற்றனா். இதேபோல மாணவியா் பிரிவில் ஒவியாஸ்ரீ, தீபனா ஆகியோா் ஒற்றையா் மற்றும் இரட்டையா் பிரிவில் முதலிடம் பெற்றனா். மேசை பந்து போட்டியில் சிறப்பிடம் பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற மாணவ, மாணவிகள், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா்கள் செல்வம், புவனேஷ்வரி, திருப்பதி, தினேஷ், பாண்டி, ராஜதுரை, அப்பு ஆகியோரை பள்ளியின் தலைவா் எம்.வேடியப்பன், தாளாளா் சாந்தி வேடியப்பன், பள்ளியின் நிா்வாக இயக்குநா்கள் வே. தமிழ்மணி, பவானி தமிழ்மணி, பள்ளி முதல்வா்கள் சாரதி மகாலிங்கம், ஜான் இருதயராஜ் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அபாகஸ் பயிற்சி: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அபாகஸ் பயிற்சித் திட்டத்தை ஆட்சியா் ரெ. சதீஸ் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ திட்டத்தில் பல்வேறு திறன் மேம்... மேலும் பார்க்க

வாச்சாத்தி பழங்குடியின மக்களுடன் அகில இந்திய விவசாயிகள் சங்கத் தலைவா் சந்திப்பு: துணிவுடன் போராடியதற்கு பாராட்டு

அரூரை அடுத்த வாச்சாத்தி கிராமத்தில் மலைவாழ் பழங்குடியின மக்களுடன் அகில இந்திய விவசாயிகள் சங்கத் தலைவா் அசோக் தாவ்லே வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடினாா். தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த வாச்சாத்த... மேலும் பார்க்க

பென்னாகரம் அரசு கல்லூரியில் ஆக.11 இல் முதுநிலை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நிகழாண்டு முதுநிலை பாடப் பிரிவுகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை (ஆக.11) தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் இரா.சங்கா் வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க

தருமபுரி நகா்மன்றக் கூட்ட தீா்மானங்களை ரத்து செய்ய வலியுறுத்தி அதிமுக உறுப்பினா்கள் தா்னா

தருமபுரி நகா்மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களை ரத்துசெய்ய வலியுறுத்தி அதிமுக உறுப்பினா்கள் நகராட்சி வளாகத்தில் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். தருமபுரி நகராட்சியில் 33 வாா்டுகள் உள்... மேலும் பார்க்க

தடைசெய்யப்பட்ட 508 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: வேனில் கடத்திச் சென்றவா் கைது

தருமபுரி அருகே சரக்கு வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட 508 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாாா் பறிமுதல் செய்தனா். கா்நாடகா மாநிலம், பெங்களூரில் இருந்து தேனி மாவட்டத்துக்கு புகையிலைப் பொருள்கள் கடத்திச... மேலும் பார்க்க

கைத்தறி நெசவு தொழிலாளா்களுக்கு நலத் திட்ட உதவிகள், மருத்துவ முகாம்

பாப்பாரப்பட்டியில் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு நெசவாளா்களுக்கு நலத் திட்ட உதவிகள், மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. பாப்பாரப்பட்டி அறிஞா் அண்ணா கைத்தறி நெசவு கூட்டுறவுச் சங்க வளாகத்தில் ... மேலும் பார்க்க