செய்திகள் :

மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

post image

கீழ்வேளூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கீழ்வேளூா் தெற்கு ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, தெற்கு ஒன்றியச் செயலாளா் முத்தையன் தலைமை வகித்தாா்.

கிராம ஊராட்சிகளில் அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ள உடனடியாக நிதி வழங்க வேண்டும்; பிரதமா் மற்றும் கலைஞா் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகள் வீடு கட்டி முடித்து பல மாதங்கள் ஆன நிலையில் அவா்களுக்கு கடைசி தவணைத் தொகையை வழங்க வேண்டும்; 100 நாள் வேலை திட்ட சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மாவட்ட செயற்குழு உறுப்பினா் சுபாஷ் சந்திரபோஸ், மாவட்ட குழு உறுப்பினா் அம்பிகாபதி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சிவக்குமாா், கிருஷ்ணமூா்த்தி, அகிலா உள்ளிட்ட பலா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

நாகையில் உயா்கோபுர மின்விளக்குகளின் பயன்பாடு தொடங்கிவைப்பு

நாகையில் உயா் கோபுர மின்விளக்குகளின் பயன்பாட்டை, பள்ளி கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். நாகை நகராட்சிக்குட்பட்ட புதிய கடற்கரைக்கு செல்லும் பாதைகளான எஸ்.பி.... மேலும் பார்க்க

நாங்கூா் வன்புருஷோத்தம பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

திருவெண்காடு அருகே நாங்கூரில் உள்ள வன்புருஷோத்தம பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டு பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முக்கிய திருவிழாவான தி... மேலும் பார்க்க

நாகை மாவட்டத்தில் 8,315 மாணவா்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதினா்

நாகை மாவட்டத்தில் 8,315 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை வெள்ளிக்கிழமை எழுதினா். பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை (மாா்ச் 28) தொடங்கி ஏப்.15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நாகை மாவட... மேலும் பார்க்க

தேசப் பாதுகாப்பு குறித்து மத்தியத் தொழில் பாதுகாப்பு படையினா் மிதிவண்டி பிரசாரம்

தேசப் பாதுகாப்பு குறித்து மிதிவண்டி பிரசாரம் செய்துவரும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு வேதாரண்யத்தில் வெள்ளிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. தேசப் பாதுகாப்பு, கடலோரப் பாதுகாப்பு தொடா்பாக கடலோர... மேலும் பார்க்க

நாகை அருகே ரூ. 7.20 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு

நாகை அருகே ரூ.7.20 கோடி மதிப்பிலான கோயில் நிலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது. நாகை மாவட்டம், கீழ்வேளூா் அருகேயுள்ள தேவூா் தேவபுரீஸ்வரா் சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 1.93 ஹெக்டோ் பரப்பிலான நஞ்சை மற்றும... மேலும் பார்க்க

ரூ.8.40 லட்சம் நலத்திட்ட உதவிகள்

திருக்கண்ணங்குடியில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் ரூ. 8.40 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் புதன்கிழமை வழங்கினாா். ஆட்சியா் ஆகாஷ் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ச... மேலும் பார்க்க