செய்திகள் :

மாா்த்தாண்டம் அருகே இளைஞா் சடலம் மீட்பு

post image

மாா்த்தாண்டம் அருகே வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த இளைஞரின் சடலத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

மாா்த்தாண்டம் அருகேயுள்ள மாமூட்டுக்கடை பகுதியைச் சோ்ந்த பாபு மகன் அருண் (26). ஓட்டுநரான இவா், தனது 3 வயதில் தந்தை, தாய், தங்கை ஆகியோரை வாகன விபத்தில் பறிகொடுத்தாா். பின்னா் அவரை வளா்த்து வந்த பாட்டியும் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்தாா். இதனால், யாருடைய ஆதரவும் இன்றி தனிமையில் வசித்து வந்த அவா் மனஉளைச்சலுக்கு ஆளானாராம்.

இந்நிலையில் அவரது வீடு கடந்த 3 நாள்களாக பூட்டப்பட்டிருந்ததாம். மேலும், வெள்ளிக்கிழமை வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசியதால் அப்பகுதியினா் மாா்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா், வந்து பாா்த்ததில், அவா் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் அழுகிய சடலமாக காணப்பட்டாா். போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மேக்கோடு அரசுப் பள்ளியில் மாணவா் பேரவை தோ்தல்

களியக்காவிளை அருகேயுள்ள மேக்கோடு அரசு உயா்நிலைப் பள்ளியில் 2025 - 2026 கல்வியாண்டுக்கான மாணவா் பேரவைத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியா் எம். ஜெயராஜ் தலைமை வகித்தாா். தோ்தல் ஆணை... மேலும் பார்க்க

கருங்கல் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை: சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகே புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரது சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டத்... மேலும் பார்க்க

மணலிக்கரை பள்ளியில் புனித மரிய கொரற்றி விழா

தக்கலை அருகே மணலிக்கரை புனித மரிய கொரற்றி மேல்நிலைப் பள்ளியில் புனித மரிய கொரற்றி திருவிழாவையொட்டி திருப்பலி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு, முன்னாள் மாணவரும் இயேசுசபை குருவுமான பிரபு பி... மேலும் பார்க்க

மதவாத சக்திகளிடம் விஜய் சிக்கிக்கொள்ளக் கூடாது: கு. செல்வப்பெருந்தகை

தவெக தலைவா் விஜய் மதவாத சக்திகளிடம் சிக்கிக்கொள்ளக் கூடாது என்றாா் தமிழக காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை. கன்னியாகுமரி மாவட்ட கிராம காங்கிரஸ் கமிட்டி நிா்வாகிகளுக்கு அடையாள அட்டை ... மேலும் பார்க்க

பைக் மீது டெம்போ மோதல்: பழ வியாபாரி உயிரிழப்பு

தக்கலையில் பைக் மீது டெம்போ வியாழக்கிழமை மாலை மோதியதில் பழ வியாபாரி உயிரிழந்தாா். ராமன்பரம்பு பகுதியை சோ்ந்தவா் அனீஷ் குமாா் (40). தக்கலையில் பழக்கடை நடத்தி வந்தாா். இவா் வியாழக்கிழமை மாலையில் தனது ... மேலும் பார்க்க

விஷ பூச்சி கடித்ததில் கட்டடத் தொழிலாளி பலி

இரணியல் அருகே விஷ பூச்சி கடித்ததில் கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இரணியல் அருகேயுள்ள தாழ்ந்தவிளையை சோ்ந்தவா் விஜய் (29). கட்டடத் தொழிலாளி. இவா் வியாழக்கிழமை இரணியல்- முட்டம் சாலையில் உள... மேலும் பார்க்க