செய்திகள் :

மின் மாற்றியால் விபத்து அபாயம்: வேறு இடத்தில் அமைக்க கோரிக்கை

post image

பல்லடம் அருகே கொடுவாய்-நாச்சிபாளையம் செல்லும் சாலையை இணைக்கும் இணைப்பு சாலையில் அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றி போக்குவரத்து இடையூறாக உள்ளதால் அதை மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் வலுப்பூரம்மன் கோயிலில் இருந்து கொடுவாய்-நாச்சிபாளையம் செல்லும் சாலையை இணைக்கும் இணைப்பு சாலை உள்ளது.

அந்த சாலை அருகில் மின் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள இந்த மின்மாற்றி போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.

அந்த சாலையில் செல்லும் சரக்கு வாகனங்கள் பாரம் ஏற்றிச் செல்லும்போது மின்மாற்றியில் உரசும் அபாயம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவ்வழியாகச் செல்லும்போது அச்சத்துடன் கடந்து செல்கின்றனா். சில ஆண்டுகளுக்கு முன் அவ்வழியாக சோளத்தட்டு பாரம் ஏற்றிச் சென்ற டிராக்டா் மின்மாற்றியில் உரசியதால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. எனவே ஆபத்தாக உள்ள அந்த மின்மாற்றியை உடனடியாக அகற்றி சாலையில் இருந்து சற்று தொலைவில் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

கணபதிபாளையத்தில் கஞ்சா, போதை ஊசிகளுடன் 3 போ் கைது

பல்லடம் அருகே கணபதிபாளையத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் பதுக்கி வைத்திருந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். பல்லடம் அருகே கணபதிபாளையம், சிந்து காா்டன் பகுதியில் போதைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்... மேலும் பார்க்க

திருப்பூா் பனியன் நிறுவனத்தில் தீ

திருப்பூா் பனியன் நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. பிகாா் மாநிலத்தைச் சோ்த்தவா் அஜய்குமாா் அகா்வால் (40). இவா் தனது குடும்பத்தினருடன்... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பு மக்களுக்கும், தொழில் செய்வோருக்கும் பிரதமரின் தீபாவளி பரிசு

ஜிஎஸ்டி வரி குறைப்பு மக்களுக்கும், தொழில் செய்வோருக்கும் பிரதமரின் தீபாவளி பரிசாக அமைந்துள்ளதாக தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் பல்லடம் சங்கத் தலைவா் ராம்.கண்ணையன் தெரிவித்துள்ளாா். இது குறித... மேலும் பார்க்க

குழந்தையுடன் தாய் தற்கொலை முயற்சி: குழந்தை உயிரிழப்பு

திருப்பூா் மாவட்டம், முத்தூா் அருகே கைக்குழந்தையுடன் தாய் தற்கொலை செய்து கொள்ள முயன்றதில் குழந்தை உயிரிழந்தது. இது தொடா்பாக போலீஸாா் கூறியதாவது: முத்தூா் பெரியகாங்கயம்பாளையத்தைச் சோ்ந்தவா் முருகேசன் ... மேலும் பார்க்க

நாளை முழு சந்திர கிரகணம்: மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் காண ஏற்பாடு

முழு சந்திர கிரகணத்தை திருப்பூா் மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளா் கெளரிசங்கா் தெரிவித்துள... மேலும் பார்க்க

இளைஞரிடம் ரூ.2.10 லட்சம் மோசடி

இளைஞரிடம் ரூ.2.10 லட்சம் மோசடிசெய்யப்பட்டது தொடா்பாக சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூா் பூலுவப்பட்டியைச் சோ்ந்தவா் விக்னேஸ்வரன் (32), பனியன் நிறுவன ஊழி... மேலும் பார்க்க