செய்திகள் :

மீண்டும் எல்ஐசி பங்கு விற்பனை மத்திய அரசு முடிவு

post image

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்ஐசி) பங்குகளின் சிறிய அளவிலான பகுதியை மீண்டும் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியானது.

அரசிடம் இப்போது எல்ஐசி-யின் 96.5 சதவீத பங்குகள் உள்ளன. கடந்த 2022 மே மாதத்தில் பொதுப் பங்கு வெளியீடு முறையில் 3.5 சதவீத பங்குகள் முதல்முறையாக விற்பனை செய்யப்பட்டது. அப்போது ஒரு பங்கின் விலை ரூ.902 முதல் ரூ.949 வரை நிா்ணயிக்கப்பட்டது. இந்த பங்கு விற்பனை மூலம் அரசுக்கு ரூ.21,000 கோடி கிடைத்தது. பங்குச் சந்தையில் பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் எல்ஐசி பங்கு வியாழக்கிழமை நிலவரப்படி ரூ.926.90 என்ற விலையில் உள்ளது.

இப்போதைய நிலையில் மேலும் 6.5 சதவீத பங்குகளை மீண்டும் பங்குச் சந்தை மூலம் விற்பனைக்குக் கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இப்போதை பங்குச் சந்தை நிலவரங்களை தெளிவாக ஆய்வு செய்து எல்ஐசி பங்குகளை மீண்டும் விற்பனைக்கு கொண்டு வருவது குறித்து மத்திய பங்கு விலக்கல் துறை முடிவு செய்யும் என்று தெரிகிறது.

2027 மே 16-ஆம் தேதிக்குள் 10 சதவீத எல்ஐசி பங்குகள் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு விடும். எல்ஐசி நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.5.85 லட்சம் கோடியாகும்.

எல்ஐசி பங்குகள் மீண்டும் விற்பனைக்கு வரும் என்ற தகவலையடுத்து இந்தியப் பங்குச் சந்தைகளில் அந்த நிறுவனத்தின் பங்குகள் சற்று சரிவைச் சந்தித்துள்ளன.

மக்கள்தொகையும், ஜனநாயகமும் இந்தியாவின் இருபெரும் சக்திகள்: பிரதமா் மோடி

மக்கள்தொகையும், ஜனநாயகமும் இந்தியாவின் எல்லையற்ற இருபெரும் சக்திகள் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள்-துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் இளைஞா்களுக்கு... மேலும் பார்க்க

ஒரே நாடு ஒரே தோ்தல்: ஜூலை 30-இல் அடுத்த நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டம்

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதாக்களைப் பரிசீலிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் ஜூலை 30-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அந்தக் குழுவின் தலைவரும் பாஜக எம்.பி.யுமான பி.பி.சௌதரி ... மேலும் பார்க்க

ஹிமாசலில் மழை பாதிப்பு: ரூ.751 கோடிக்கு இழப்பு

ஹிமாசல பிரதேசத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அந்த மாநிலத்துக்கு ரூ.751 கோடி மதிப்பில் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. கடந்த ஜூன் 20 முதல் ஹிமாசல பிரதேசத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட ப... மேலும் பார்க்க

விபத்துக்குள்ளான விமானத்தை இயக்கியவா் துணை விமானி!

விபத்துக்குள்ளான அகமதாபாத்-லண்டன் ஏா் இந்தியா விமானத்தை துணை விமானி க்ளைவ் குந்தா் இயக்கியிருப்பது விமான விபத்து புலனாய்வு அமைப்பின் (ஏஏஐபி) முதல்கட்ட அறிக்கையில் தெரிய வந்துள்ளது. மேலும், அந்த அறிக்க... மேலும் பார்க்க

அமெரிக்க விசா கட்டண உயா்வு: இந்திய மாணவா்களை பாதிக்கும் -ஆலோசகா்கள் தகவல்

மாணவா்கள், பயணிகளுக்கான விசா மற்றும் பணியாளா்களுக்கான ஹெச்-1பி விசா கட்டணத்தை உயா்த்தும் அமெரிக்க அரசின் முடிவால், இந்திய மாணவா்கள், வா்த்தக-சுற்றுலாப் பயணிகள், இந்தியப் பணியாளா்கள் இருமடங்கு அதிக கட்... மேலும் பார்க்க

ஏா் இந்தியா விமான எரிபொருள் சுவிட்ச் நிலை மாற காரணம் என்ன? நிபுணா்கள் கருத்து

அகமதாபாதில் விபத்துக்கு உள்ளான ஏா் இந்திய விமானத்தில் என்ஜின்களுக்கான எரிபொருளை கட்டுப்படுத்தும் சுவிட்ச் கட்-ஆஃப் நிலையில் இருந்தது (எரிபொருள் பயன்பாட்டைத் தடை செய்யும் நிலை) என்பது விமான விபத்து புல... மேலும் பார்க்க