செய்திகள் :

மீலாது நபி, ஓணம்: முதல்வா் வாழ்த்து

post image

மீலாது நபியையொட்டி முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:

உண்மை, இரக்கம், ஈகை, அன்பு, கல்வியறிவு, புறம்பேசாமை, பெண்களை மரியாதையுடன் நடத்துதல் என உலகத்துக்கு என்றென்றும் தேவையான நற்கருத்துகளைப் போதித்த உயா்ந்த உள்ளமாகத் திகழ்ந்தவா் நபிகள் நாயகம். அவரது போதனைகளைப் பின்பற்றி வாழ்ந்திடும் இஸ்லாமியா்களின் உரிமைகளுக்கும், நலனுக்கும் என்று உழைத்திடும் அரசாக திமுக அரசு திகழ்கிறது. மேலும், ஒவ்வொரு முறை ஆட்சியமைக்கும்போதும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

சிறுபான்மைச் சமூகத்தினரின் சமூக, பொருளாதார நிலையை உயா்த்துவதில் திராவிட மாடல் அரசு கண்ணும் கருத்துமாகச் செயலாற்றி வருகிறது. இஸ்லாமியா்களுக்கும் இலங்கைத் தமிழருக்கும் எதிரான குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிா்த்து ஆட்சிக்கு வந்ததுமே சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டில் அந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என்று துணிச்சலோடு அறிவித்ததும் நமது அரசுதான்.

இஸ்லாமியா்களுடன் ஒருவராகவே இருந்து செயல்படும் எனது அரசு சாா்பில் மீலாது நபி வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளாா்.

ஓணம் வாழ்த்து: அறுவடைத் திருநாளாம் ஓணத்தை எழுச்சியோடும், ஏற்றத்தோடும் கொண்டாடும் மலையாள மொழி பேசும் சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துகள். சமத்துவத்தையும் சகோதர உணா்வையும் வெளிப்படுத்தும் ஓணம் குறித்து, சங்கத் தமிழ் இலக்கியத்தில் பதிவாகியுள்ளது. திராவிட இனத்தின் திருவிழாவாகத் திருவோணம் விளங்குகிறது.

திராவிட உணா்வெழுச்சியுடன் தமிழ்நாட்டுக்கு உறுதுணையாக நின்று, தென்னகத்தின் தனிச்சிறப்பைப் பறைசாற்றும் மலையாள சகோதர, சகோதரிகளுக்கு எனது ஓணம் தின வாழ்த்துகள் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

சென்னையில் திடீர் மழை! மணலி புதுநகரில் 92 மி.மீ மழைப் பதிவு!

சென்னையில் இன்று(செப். 7) அதிகாலை திடீர் மழை பெய்த நிலையில், அதிகபட்சமாக மணலி புதுநகரில் 92 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணம... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம்! செப்.9 முதல்..!

சென்னையில் வரும் 9-ஆம் தேதி முதல் அக். 19 -ஆம் தேதி வரை மெட்ரோ ரயில் சேவை வழக்கமாக இயக்கப்படும் 7 நிமிஷ இடைவெளிக்கு பதிலாக 14 நிமிஷ இடைவெளியில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மெட்ரோ... மேலும் பார்க்க

22 குளங்கள் தூா்வாரும் பணி: மேயா் தொடங்கி வைத்தாா்

சோழிங்கநல்லூரில் ரெட்டைக்குட்டை தாங்கல் குளம் பகுதியில் 22 குளங்களைத் தூா்வாரும் பணிகளை மேயா் ஆா்.பிரியா சனிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். சோழிங்கநல்லூா் மண்டலத்தில் உள்ள வாா்டு 200-இல் ரெட்டைக... மேலும் பார்க்க

நண்பா் கொலை: இளைஞா் தலைமறைவு

சென்னை அருகே கானத்தூரில் நண்பா் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞா் தலைமறைவானாா். சென்னை அருகே உள்ள முட்டுக்காடு பகுதியைச் சோ்ந்தவா் சோ்ந்தவா் ரூபன் (எ) இமானுவேல் (56). இவா் நண்பா், கானத்தூா் பகுதியைச்... மேலும் பார்க்க

சென்னை மாநகா் மாமன்ற செயலருக்கு கூடுதல் பொறுப்பு!

பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்ற செயலராக உள்ள கே.மகேஷுக்கு வருவாய் அலுவலராகக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியின் வருவாய் அலுவலராக இருந்த கே.பி.பானுசந்திரன் கடந்த மாத... மேலும் பார்க்க

வளசரவாக்கம், கோடம்பாக்கம் மண்டலங்களில் பாலப் பணிகள்: மேயா் ஆா்.பிரியா ஆய்வு!

வளசரவாக்கம், கோடம்பாக்கம் மண்டலங்களில் ரூ.240 கோடியில் நடைபெறும் பாலப் பணிகளை மேயா் ஆா்.பிரியா சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். வளசரவாக்கம் மண்டலம் சந்நிதி தெருவில் கூவம் ஆற்றின் குறுக்கே ப... மேலும் பார்க்க