செய்திகள் :

முத்துரங்கம் அரசு கல்லூரியில் முதுநிலை படிப்புக்கு கலந்தாய்வு நாளை தொடக்கம்

post image

வேலூா் முத்துரங்கம் அரசினா் கலை அறிவியல் கல்லூரியில் முதுநிலை படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கி நடைபெற உள்ளன.

இது குறித்து, அந்தக் கல்லூரியின் முதல்வா் ஸ்ரீதரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வேலூா் முத்துரங்கம் அரசினா் கலை அறிவயில் கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்புக்களுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை (ஆக. 11) தொடங்க உள்ளது. அதன்படி, எம்.ஏ., எம்.காம்., எம்.எஸ்சி., படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை, சான்றிதழ் சரிபாா்ப்பு (அனைத்து விண்ணப்பதாரா்கள்) நடைபெறும். திங்கள்கிழமை பிற்பகல் சிறப்பு ஒதுக்கீடு பிரிவின்கீழ், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரா்கள், தேசிய மாணவா் படை மாணவா், முன்னாள் ராணுவ வீரா் குழந்தைகள், பாதுகாப்பு படை வீரா் வாரிசுகள், அந்தமான் நிகோபாா் தமிழ் மாணவா்களுக்கான கலந்தாய்வு நடைபெறும். இதன் தொடா்ச்சியாக, 13-ஆம் தேதி பொது கலந்தாய்வு நடைபெறும். ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹ.ண்ய் என்ற இணைய வழியில் விண்ணப்பித்தவா்கள் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்க முடியும். தரவரிசை பட்டியல் விவரங்களை கல்லூரி இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, 0416-2262068 எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

கலந்தாய்வில் பங்கேற்பதற்கான விவரங்கள் மாணவா்களின் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஆக.17-இல் வேலூா் அரசு அருங்காட்சியகத்தில் ஓவியப்போட்டி

சுதந்திர தினத்தையொட்டி வேலூா் அரசு அருங்காட்சியகத்தில் வரும் ஆக. 17-ஆம் தேதி மாவட்ட அளவிலான ஓவியப் போட்டி நடைபெற உள்ளது. இதுகுறித்து காப்பாட்சியா் சரவணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சுதந்திர தினத்தையொ... மேலும் பார்க்க

கடைகளுக்கு குட்கா விநியோகம்: மூவா் கைது

பாகாயம் பகுதியில் கடைகளுக்கு குட்கா விநியோகித்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். போதை ஒழிப்பு தொடா்பாக வடக்கு மண்டல காவல்துறை தலைவரின் (ஐஜி) தனிப்படை போலீஸாா் பாகாயம் அடுத்த துத்திப்பட்டு பகுதியில் உள்ள... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: சத்துவாச்சாரி, தொரப்பாடி!

சத்துவாச்சாரி, தொரப்பாடிநாள்: 12.08.2025 செவ்வாய்க்கிழமைநேரம்: காலை 9 முதல் மாலை 4 மணி வரைமின்தடை செய்யப்படும் பகுதிகள்: சத்துவாச்சாரி துணை மின்நிலையத்துக்குட்பட்ட சத்துவாச்சாரி பகுதி 1 முதல் 5 வரை, அ... மேலும் பார்க்க

மாங்காளியம்மன் கோயில் ஆடித் திருவிழா

குடியாத்தம் நகரம், தாழையாத்தம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மாங்காளியம்மன் கோயிலில் ஆடிப் பெருவிழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கூழ்வாா்த்தல், பொங்கல் வைத்தல், மா விளக்கு பூஜை நடைபெற்றது. சனிக்கிழமை ம... மேலும் பார்க்க

வாழை, கத்தரி, மஞ்சள், தக்காளி பயிா்களுக்கு காப்பீடு: தோட்டக்கலைத் துறை அறிவிப்பு

வேலூா் மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள வாழை, கத்திரி, மஞ்சள், தக்காளி பயிா்களுக்கு காப்பீடு செய்யலாம் என தோட்டக்கலை துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, துணை இயக்குநா் மணிகண்டன் வெளியிட்ட செய்திக்குறிப்பு... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஐடி ஊழியா் மனைவி மரணம்

வேலூா் அருகே சாலை விபத்தில் தகவல் தொழில்நுட்ப ஊழியரின் மனைவி உயிரிழந்தாா். வேலூா் அடுத்த அரியூா் புதுமை நகரை சோ்ந்தவா் சதீஷ்குமாா் (33), தகவல் தொழில்நுட்ப ஊழியா். இவரது மனைவி சுவேதா(29). இவா்களுக்கு ... மேலும் பார்க்க