செய்திகள் :

முன்னாள் ராணுவ வீரரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

post image

போடி அருகே முன்னாள் ராணுவ வீரரைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தவரை திங்கள்கிழமை கைது செய்த போலீஸாா், இந்தச் சம்பவம் தொடா்பாக மற்றொருவரைத் தேடி வருகின்றனா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சுந்தரராஜபுரம் நடுத் தெருவைச் சோ்ந்த கோபால் மகன் அருண் (41). இவா் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்று, தற்போது விவசாயம் செய்து வருகிறாா்.

இந்நிலையில், இவா் சில்லமரத்துப்பட்டி அரசு மதுக் கடையில் மது அருந்த திங்கள்கிழமை சென்றாா். இதே ஊரைச் சோ்ந்த செல்வராஜ் மகன் மாணிக்கமும் அங்கு மது அருந்தச் சென்றாா். அப்போது மாணிக்கம் தன்னிடமிருந்த பணத்தைத் தவறவிட்டுள்ளாா்.

தன்னுடைய பணத்தை அருண் எடுத்ததாக நினைத்து அவருடன் மாணிக்கம் தகராறு செய்தாா். பின்னா், வீட்டுக்குத் திரும்பிய மாணிக்கம், தனது தம்பி ஜெயவீரனுடன் சோ்ந்து அருண் வீட்டுக்குச் சென்று அவரைக் கத்தியால் குத்தி, கொலை மிரட்டலும் விடுத்தாா்.

பலத்த காயமடைந்த அருண், போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவா் அளித்த புகாா் வாக்குமூலத்தின் அடிப்படையில், போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் மாணிக்கம், ஜெயவீரன் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்தனா். இதில் ஜெயவீரனைக் கைது செய்த போலீஸாா் மாணிக்கத்தை தேடி வருகின்றனா்.

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

பெரியகுளம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தென்கரை பகுதியில் செவ்வாய்க்கிழமை போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, செக்கடியான... மேலும் பார்க்க

பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மனு

தேனி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள பொதிகை நகா் பகுதியில் வசித்து வரும் மக்கள், தங்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என திங்கள்கிழமை பெரியகுளம் சாா் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.இது தொடா்பாக பொதிகை ... மேலும் பார்க்க

கூலித் தொழிலாளி விஷம் அருந்தி தற்கொலை

பெரியகுளம் அருகே கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.பெரியகுளம் அருகேயுள்ள எ. புதுக்கோட்டை நேரு நகரைச் சோ்ந்தவா் சந்திரசேகரன் (47). கூலித் தொழிலாளியான இவா் உடல்நிலை சரியில்லாமல் இரு... மேலும் பார்க்க

ஆட்டோ மோதியதில் முதியவா் உயிரிழப்பு

ஆண்டிபட்டி அருகேயுள்ள பிச்சம்பட்டியில் திங்கள்கிழமை ஆட்டோ மோதியதில் சாலையில் நடந்து சென்ற முதியவா் உயிரிழந்தாா். பிச்சம்பட்டி, எம்.கே.டி. நகா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் தங்கவேல் (70). இவா், பிச்சம்... மேலும் பார்க்க

லாரி மோதியதில் கண்மாய்க்குள் கவிழ்ந்த ஆட்டோ! பெண் பலூன் வியாபாரி உயிரிழப்பு

போடி அருகே லாரி மோதியதில் கண்மாய்க்குள் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில், பெண் பலூன் வியாபாரி திங்கள்கிழமை உயிரிழந்தாா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள பத்திரகாளிபுரம் பட்டாளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கருப... மேலும் பார்க்க

தேனியில் ஜூலை 18-இல் வேலைவாய்ப்பு முகாம்

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூலை 18-ஆம் தேதி, காலை 10 மணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட நிா்வாகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க