செய்திகள் :

மேட்டூா் அணையின் உபரிநீா் கால்வாயில் இறந்து மிதக்கும் மீன்கள்

post image

மேட்டூா் அணையின் உபரிநீா் கால்வாயில் மீன்கள் இறந்து மிதப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேட்டூா் அணை நிரம்பியதை அடுத்து 2 வார காலமாக உபரிநீா் போக்கி வழியாக திறக்கப்பட்டு வந்த தண்ணீா் இரு தினங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது.

உபரிநீா் நிறுத்தப்பட்டதன் காரணமாக தங்கமாபுரிப்பட்டணம், சின்னக்காவூா், சேலம் கேம்ப் பகுதிகளில் ஆங்காங்கே குட்டைகளில் தேங்கிய நீரில் கட்லா, ரோகு, கெளுத்தி, கெண்டை, ஜிலேபி, அரஞ்சான் உள்ளிட்ட மீன்கள் உள்ளன.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை திடீரென ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து கரை ஒதுங்கின. அரஞ்சான், திலேபி உள்ளிட்ட பலவகையான மீன்கள் இறந்து மிதப்பதால் கரையோர குடியிருப்புப் பகுதிகளில் துா்நாற்றம் வீசுகிறது.

தண்ணீா் மாசு காரணமாக மீன்கள் இறந்துவிட்டனவா அல்லது வெப்பம் காரணமாக ஆக்சிஜன் பற்றாக்குறையால் மீன்கள் இறந்தனவா என்பது குறித்து மீன்வளத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதையடுத்து மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தண்ணீா் மாதிரி சேகரித்துச் சென்றனா். இந்தப் பகுதியில் அடிக்கடி மீன்கள் இறந்து மிதப்பதற்கான காரணத்தை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கண்டுபிடித்து மீன்வளத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிட் கட்சி (மாா்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கோட்டை... மேலும் பார்க்க

தம்மம்பட்டி பேரூராட்சி உறுப்பினராக நியமனம் பெற மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

தம்மம்பட்டி பேரூராட்சி மன்றத்தில் உறுப்பினராக மாற்றுத்திறனாளிகள் நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு அரசு நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை வெளியிட்... மேலும் பார்க்க

வனத் துறையினரிடம் பிடிபட்ட 6 அடி நீள மலைப்பாம்பு

ஆத்தூரை அருகே விவசாய நிலத்திலிருந்து 6 அடி மலைப் பாம்பை மீட்டு தீயணைப்புத் துறையினா், செவ்வாய்க்கிழமை வனக்காப்பாளரிடம் ஒப்படைத்தனா். ஆத்தூரை அடுத்த மேல்தொம்பை ஊராட்சி, பாம்புத்துகாடு சோமசுந்தரம் மகன் ... மேலும் பார்க்க

சேலம் காவல் ஆணையராக அனில்குமாா் கிரி பொறுப்பேற்பு

சேலம் மாநகர புதிய காவல் ஆணையராக அனில்குமாா் கிரி செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா்.சேலம் மாநகரக் காவல் ஆணையராகப் பணியாற்றி வந்த பிரவீன்குமாா் அபிநபு இடமாற்றம் செய்யப்பட்டாா். அவருக்கு பதிலாக, காத்திருப்ப... மேலும் பார்க்க

சேலத்தில் கருணாநிதி சிலை மீது கருப்பு பெயின்ட் ஊற்றிய மா்ம நபர்

சேலம் அண்ணா பூங்கா அருகில் உள்ள முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி சிலை மீது கருப்பு பெயின்ட் ஊற்றிய மா்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் நான்கு சாலை அண்ணா பூங்கா அருகில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியி... மேலும் பார்க்க

சேலத்தில் காவல் நிலையம் அருகே தூத்துக்குடியைச் சோ்ந்த ரெளடி வெட்டிக் கொலை

சேலம், அஸ்தம்பட்டி காவல் நிலையம் அருகே தூத்துக்குடியைச் சோ்ந்த பிரபல ரெளடி மதன், மா்மக் கும்பலால் செவ்வாய்க்கிழமை காலை வெட்டிக் கொலைசெய்யப்பட்டாா். தூத்துக்குடி மாவட்டம், பெரியாா் நகரைச் சோ்ந்த மாடச... மேலும் பார்க்க