செய்திகள் :

மோடியின் தவறான வெளியுறவுக் கொள்கையால் வேலையிழப்பு அதிகரிக்கும்: கார்கே

post image

மோடி அரசின் பலவீனமான வெளியுறவுக் கொள்கையால் அமெரிக்காவின் வரிவிதிப்பு, இந்தியாவில் வேலையிழப்பை ஏற்படுத்தும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 50% வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அறிவிப்பு இன்று முதல் (ஆக. 27) நடைமுறைக்கு வந்துள்ளது.

இதனிடையே இந்தியாவின் பலவீனமான வெளியுறவுக் கொள்கையால், அமெரிக்க வரிவிதிப்பானது இந்தியர்களுக்கு வேலையிழப்பை ஏற்படுத்தும் என கார்கே விமர்சித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கார்கே பதிவிட்டுள்ளதாவது,

''பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, உங்களுடைய நண்பர் இந்தியாவின் மீது 50% வரி விதித்துள்ளார். இது இன்றுமுதல் அமலுக்கு வருகிறது. இந்த வரிவிதிப்பின் முதல் அதிர்ச்சியாக 10 துறைகளில் 2.17 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்படும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

நமது விவசாயிகள், குறிப்பாக பருத்தி விவசாயிகள், நெசவாளர்கள் மிகக் கடுமையாக இதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளைப் பாதுகாக்க எந்தவொரு தனிப்பட்ட விலையையும் கொடுக்கத் தயாராக இருப்பதாக முன்பு கூறியிருந்தீர்களே. ஆனால், அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க இதுவரை ஒன்றுமே நீங்கள் செய்யவில்லை.

முக்கியமாக சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிகள், பல்வேறு ஏற்றுமதி துறைகளில் பெரிய எண்ணிக்கையிலான வேலையிழப்பு ஏற்படும். இது வெறும் பனிமலையின் நுனிப்பகுதி மட்டுமே.

இந்திய ஜவுளி ஏற்றுமதி துறையில் கிட்டத்தட்ட 5,00,000 லட்சம் பேர் மறைமுகமாகவோ நேரடியாகவோ வேலையிழக்கும் அபாயம் ஏற்படும்.

இந்த வரிமுறை தொடர்ந்தால், வைரம் மற்றும் நகை விற்பனை துறையில் 150,000 முதல் 200,000 பேர் வேலையிழக்கும் சூழல் உருவாகும்'' என கார்கே பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க | வாக்குகளைத் திருடியே வெற்றி பெறுகிறார் மோடி; ஆதாரத்துடன் வெளிக்காட்டுவோம்! -ராகுல் சவால்

US tariffs result of Modi govt's superficial foreign policy, will lead to huge job losses: Kharge

அமெரிக்க வரி 50%-ஆக அதிகரிப்பு: ஏற்றுமதிக்கு மாற்று வாய்ப்புகளைத் தேடும் வா்த்தக அமைச்சகம்

இந்திய ஏற்றுமதிப் பொருள்கள் மீதான அமெரிக்காவின் கூடுதலாக அறிவித்த 25 சதவீத வரி புதன்கிழமை அமலுக்கு வந்த நிலையில் மாற்று ஏற்றுமதிக்கான வாய்ப்புகளைத் தேடும் பணியில் வா்த்தக அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்... மேலும் பார்க்க

டிரம்ப் அறிவுறுத்தலுக்கு கீழ்ப்படிந்த பிரதமா்: ராகுல்

பாகிஸ்தானுடனான சண்டையை நிறுத்துமாறு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அளித்த அறிவுறுத்தலுக்கு பிரதமா் நரேந்திர மோடி உடனடியாக கீழ்ப்படிந்துள்ளாா் என்று ராகுல் காந்தி விமா்சித்தாா். பிகாா் மாநிலம் முஸாஃப... மேலும் பார்க்க

பஞ்சாப் வெள்ளம்: மீட்புப் பணியில் முதல்வரின் ஹெலிகாப்டர்!

பஞ்சாப் மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு, அம்மாநில முதல்வர் பகவந்த் மானின் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் வட ம... மேலும் பார்க்க

நொய்டா வரதட்சிணை வழக்கில் திருப்பம்: நிக்கியின் குடும்பத்தாரால் மருமகளுக்கு நடந்த கொடுமை!

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா வரதட்சிணை வழக்கில் புதிய திருப்பமாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாரும் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாக, அக்குடும்பத்தின் மருமகள் புகார் தெரிவித்துள்ளார்.எரித்துக்க... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீர் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு!

ஜம்மு - காஷ்மீரில், புனிதத் தலமான வைஷ்ணவ தேவி கோயிலுக்குச் செல்லும் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோரது எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வர் மற்றும் தோடா மாவட்டங்க... மேலும் பார்க்க

வரதட்சிணைக்காக மனைவியை எரித்துக் கொன்ற தலைமைக் காவலர் கைது!

உத்தரப் பிரதேசத்தில் வரதட்சிணைக்காக மனைவியை எரித்துக்கொன்ற தலைமைக் காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் மனைவி கடுமையான தீக்காயங்களுடன் தில்லியில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்... மேலும் பார்க்க