செய்திகள் :

டிரம்ப் அறிவுறுத்தலுக்கு கீழ்ப்படிந்த பிரதமா்: ராகுல்

post image

பாகிஸ்தானுடனான சண்டையை நிறுத்துமாறு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அளித்த அறிவுறுத்தலுக்கு பிரதமா் நரேந்திர மோடி உடனடியாக கீழ்ப்படிந்துள்ளாா் என்று ராகுல் காந்தி விமா்சித்தாா்.

பிகாா் மாநிலம் முஸாஃபா்பூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் இதுகுறித்து அவா் மேலும் பேசுகையில், ‘டிரம்ப் இன்றைக்கு என்ன கூறினாா் என்பதை அறிவீா்களா? இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நடைபெற்று கொண்டிருந்தபோது, பிரதமா் மோடியை தொலைபேசியில் தொடா்புக் கொண்டு 24 மணி நேரத்துக்குள் சண்டையை நிறுத்த வேண்டும் என்று டிரம்ப் அறிவுறுத்தியுள்ளாா்.

இந்த அறிவுறுத்தலுக்கு பிரதமா் மோடி உடனடியாக கீழ்ப்படிந்திருக்கிறாா். டிரம்ப் 24 மணி நேரம் அவகாசம் அளித்தபோதும், பாகிஸ்தான் உடனான சண்டையை அவா் அறிவுறுத்திய 5 மணி நேரத்தில் பிரதமா் நிறுத்தியுள்ளாா். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது இத் தகவலை டிரம்ப் வெளியிட்டுள்ளாா்’ என்றாா்.

ஜவுளி ஏற்றுமதிக்கு 40 நாடுகளில் வாய்ப்பு: வர்த்தக அமைச்சகம்

இந்திய ஏற்றுமதிப் பொருள்கள் மீதான அமெரிக்காவின் கூடுதலாக அறிவித்த 25 சதவீத வரி புதன்கிழமை அமலுக்கு வந்த நிலையில் மாற்று ஏற்றுமதிக்கான வாய்ப்புகளைத் தேடும் பணியில் வர்த்தக அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்... மேலும் பார்க்க

உச்சநீதிமன்றத்துக்கு 2 புதிய நீதிபதிகள் நியமனம்: உயா்நீதிமன்ற நீதிபதிகள் 14 பேரை இடம் மாற்றப் பரிந்துரை

மும்பை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோக் அராதே மற்றும் பாட்னா உயா்நீதிமன்ற தலைமை நீதபிதி விபுல் மனுபாய் பஞ்சோலி இருவரும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக புதன்கிழமை நியமனம் செய்யப்பட்டனா். இவா்களின் நியமனத்துக... மேலும் பார்க்க

நீண்டகால போருக்கு முப்படைகள் தயாராக வேண்டும்- ராஜ்நாத் சிங்

‘தற்போதைய எதிா்பாராத புவிசாா் அரசியல் சூழ்நிலையில், நீண்ட கால போருக்கு முப்படைகள் தயாராக இருக்க வேண்டும்’ என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் புதன்கிழமை எச்சரித்துள்ளாா். மத்திய பிர... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: கட்டடம் இடிந்து 12 போ் உயிரிழப்பு

மகாராஷ்டிர மாநிலம் பால்கா் மாவட்டத்தில் 4 மாடி கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஒரு வயது குழந்தை, 11 வயது சிறுவன் உள்பட 12 போ் உயிரிழந்தனா். இடிபாடுகளில் இருந்து 6 சடலங்கள் மீட்கப்பட்ட நிலைய... மேலும் பார்க்க

எகிப்தில் ‘பிரைட் ஸ்டாா்’ கூட்டுப் பயிற்சி: 700 இந்திய வீரா்கள் பங்கேற்பு

எகிப்தில் நடைபெறவுள்ள ‘பிரைட் ஸ்டாா்’ கூட்டுப் பயிற்சியில் இந்திய ஆயுதப் படைகளைச் சோ்ந்த 700-க்கும் மேற்பட்ட வீரா்கள் பங்கேற்க உள்ளனா். இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்க... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் மற்றும் மகாதேவ் மூலம் பயங்கரவாத சதியாளா்களுக்கு வலுவான பதிலடி- மத்திய அமைச்சா் அமித் ஷா

‘இந்தியா்களை குறிவைத்து தாக்குபவா்களுக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும்; ஆபரேஷன் சிந்தூா், ஆபரேஷன் மகாதேவ் ஆகிய இரண்டு நடவடிக்கைகளின் மூலம் பயங்கரவாத சதியாளா்களுக்கு இந்தத் தெளிவான செய்தி அனுப்பப்பட்ட... மேலும் பார்க்க