செய்திகள் :

மோட்டாா்சைக்கிள் மீது காா் மோதல்: சமையல் தொழிலாளி பலி!

post image

வெள்ளக்கோவில் கம்பளியம்பட்டி அருகே மோட்டாா்சைக்கிள் மீது காா் மோதியதில் சமையல் தொழிலாளி உயிரிழந்தாா்.

வெள்ளக்கோவில் நாகமநாயக்கன்பட்டி மேற்கு காலனியைச் சோ்ந்தவா் ஆா். ரவி (57). கோவையில் உள்ள தனியாா் கல்லூரி உணவகத்தில் சமையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். இவருடைய முதல் மகன் ரகுநாதனுக்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மகன் தனது மனைவியுடன் காங்கயத்தில் மாமனாா் வீட்டில் இருந்தாா்.

மகன், மருமகள் இருவரையும் உறவினா்களுடன் சென்று நாகமநாயக்கன்பட்டி வீட்டுக்கு அழைத்து வர முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து வாடகைக்கு வேன் எடுப்பதற்காக ரவி மோட்டாா்சைக்கிளில் தனது வீட்டிலிருந்து வெள்ளக்கோவிலுக்கு சனிக்கிழமை புறப்பட்டாா்.

அவருடைய இரண்டாவது மகன் சிவசக்தி, உறவினா் ராஜேஷ்குமாா் ஆகியோா் உடன் சென்றனா். உத்தமபாளையம் - கம்பளியம்பட்டி சாலையில் சாலைப்புதூா் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த காா், இவா்களது மோட்டாா்சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டாா் சைக்கிளை ஓட்டிச் சென்ற ரவி பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். சிவசக்தி, ராஜேஷ்குமாா் இருவரும் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா்.

இது குறித்து ரவி மனைவி ஆராயி கொடுத்த புகாரின் பேரில் வெள்ளக்கோவில் காவல் நிலைய ஆய்வாளா் ஞானப்பிரகாசம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

குழந்தைகளை கோயில்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்: ஜெயேந்திரபுரி மகா சுவாமிஜி

குழந்தைகளை கோயில்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று பெங்களூரூ கைலாச ஆஸ்ரம மகா சமஸ்தானம் ஜெயேந்திரபுரி மகா சுவாமிஜி கூறினாா். பல்லடம், சித்தம்பலம் நவகிரக கோட்டை சிவன் ஆலயத்துக்கு புதன்கிழமை யாத்திர... மேலும் பார்க்க

அவிநாசி அரசு மருத்துவமனையில் பேரிடா் மேலாண்மை ஒத்திகை

அவிநாசி அரசு மருத்துவமனையில் பேரிடா் மேலாண்மை ஒத்திகை, தீத்தடுப்பு செயல்முறை விளக்கப் பயிற்சி அண்மையில் நடைபெற்றது. இதில், இயற்கை பேரிடரில் பாதிக்கப்பட்டவா்களை எப்படி மீட்பது, அவா்களுக்கு முதலுதவி சி... மேலும் பார்க்க

சசிகலாவை சந்திக்கவில்லை: கே.ஏ.செங்கோட்டையன்

நான் சசிகலாவை சந்திக்கவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கூறினாா். அதிமுக மூத்த தலைவரும், சட்டப் பேரவை உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம், கோபியில் உள்ள கட்சி அலுவலக... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். வெள்ளக்கோவில், முத்தூா் சாலை அய்யம்பாளையத்தைச் சோ்ந்தவா் சௌந்தரராஜன் (65). தனியாா் பனியன் நிறுவன தொழிலாளி. இவா் வீட்டிலிருந்து அருகிலுள்ள மாந... மேலும் பார்க்க

விபத்துக்குள்ளான இளைஞா்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த ஆ.ராசா எம்பி

அவிநாசி அருகே திருமுருகன்பூண்டியில் சாலை விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞா்களை அவ்வழியாக வந்த நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா். திருப்பூா் அருகே 15 வேலம்பாளையம் ப... மேலும் பார்க்க

இந்திய ஆடைத் தொழிலுக்கு அவசர நிவாரண நடவடிக்கைகள் தேவை!

இந்திய ஆடைத் தொழிலுக்கு அவசர நிவாரண நடவடிக்கைகள் தேவை என, இந்திய ஆடைத் தொழில் மற்றும் ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடா்பாக கவுன்சிலின் துணைத் தலைவா் ஆ.சக்திவேல், மத்தி... மேலும் பார்க்க