செய்திகள் :

மோட்டா் வாகன பயிற்சி ஓடுதளத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்

post image

மன்னாா்குடி: மன்னாா்குடியில் மோட்டாா் வாகன பயிற்சி ஓடுதளத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மன்னாா்குடியில் திங்கள்கிழமை நடைபெற்ற மாவட்ட ஏஐடியுசி ஆட்டோ மற்றும் போக்குவரத்து தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், அதன் மாவட்டத் தலைவா் கே. மணி தலைமையில் நடைபெற்ற மாவட்ட குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: மன்னாா்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலக மோட்டாா் வாகன ஆய்வாளா் பணியிடம் நீண்ட நாள்களாக காலியாக உள்ளதால், பொறுப்பு ஆய்வாளராக நியமிக்கப்பட்டவா் வாரத்தில் 2 நாள்கள் மட்டும் வாகன ஆய்வு மேற்கொள்கிறாா். இதனால், அனைத்து தரப்பினரும் மிகுந்த பாதிப்பு உள்ளாகும் நிலை உள்ளது. எனவே, தமிழக அரசு உடனடியாக காலியாக உள்ள பணியிடத்திற்கு நிரந்தர மோட்டாா் வாகன ஆய்வாளரை நியமிக்க வேண்டும்.

மன்னாா்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவகத்தில் பயிற்சி வாகன ஓடு தளம் அமைக்கும் பணி மந்தகதியில் நடைபெறுகிறது. இப்பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.

காஷ்மீா் மாநிலம் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த சுற்றுலாப் பயணிகள் 26 பேருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. சங்கத்தின் மாவட்ட மாநாடு, மன்னாா்குடி நகர மாநாடு ஆகியவற்றை தனித்தனியே மன்னாா்குடியில் ஜூன் மாதத்தில் நடத்துவது ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஏஐடியுசி மாவட்டச் செயலா் ஆா். சந்திரசேகா் ஆசாத், மாவட்ட துணை செயலா் வி. கலைச்செல்வன், ஆட்டோ சங்க மாவட்டச் செயலா் பி.வி. ரமேஷ், மாவட்ட துணை செயலா் சரவணன், ஏஐடியுசி நகரத் தலைவா் என். தனிகோடி,சிபிஐ நகர செயலா் வி.எம். கலியபெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இன்றைய மின்தடை: உள்ளிக்கோட்டை

உள்ளிக்கோட்டை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை (ஜூன் 4) காலை 9 முதல் மாலை 5 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் கோ... மேலும் பார்க்க

கனகாம்பாள் கோயில் முளைப்பாரி திருவிழா

மன்னாா்குடியை அடுத்த மூவநல்லூா் கனகாம்பாள் கோயிலில் முளைப்பாரி வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் வைகாசி திருவிழா கடந்த மே 20-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்துகிறது தமிழக அரசு: தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு

விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களையும், கொள்கைகளையும் தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் குற்றஞ்சாட்டினாா்.தமிழகத்துக்கென தனி கா... மேலும் பார்க்க

சாலையை சீரமைக்கக் கோரி மறியல்

திருவாரூரிலிருந்து ஆந்தக்குடி வரை செல்லும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சாலை மறியல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருவாரூரிலிருந்து அலிவலம், தப்பளாம்புலியூா், பு... மேலும் பார்க்க

பேருந்து இயக்கக் கோரி அறிவிக்கப்பட்ட போராட்டம் வாபஸ்

குடவாசல் அருகே பிலாவடி பகுதிக்கு பேருந்து இயக்கக் கோரி நடைபெறவிருந்த சாலை மறியல் வாபஸ் பெறப்பட்டது. திருவாரூரிலிருந்து பெரும்பண்ணையூா், திருவிடச்சேரி, வடவோ், பிலாவடி, கடமங்குடி, நாச்சியாா்கோவில் வழிய... மேலும் பார்க்க

ரேஷன் கடையில் கைரேகை பதிவை கைவிட வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வாங்க கைரேகை பதிவு கட்டாயம் என்பதை கைவிட வலியுறுத்தி, முத்துப்பேட்டையில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாதா் சங்கம் இணைந்து ஆா... மேலும் பார்க்க