செய்திகள் :

ராஜபாளையம்: ஆசிரமத்திற்கு வைத்த சீல் உடைப்பு; தடையை மீறி உள்ளே சென்ற நித்தியானந்தா சீடர்கள் கைது!

post image

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கோதை நாச்சியார்புரம் மற்றும் சேத்தூரில் நித்தியானந்தா பரமஹம்சர் ஆசிரமம் செயல்பட்டு வந்தது.

நித்தியானந்தர் சர்ச்சையில் சிக்கி வெளிநாடு சென்றதும் இந்த நிலத்தை தானமாக வழங்கிய மருத்துவர் கணேசன், பத்திரப்பதிவை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் நிலம் தொடர்பான விவகாரத்தில் சுமுக தீர்வு எட்டுவதற்காக சந்திரன் என்பவருக்கு உரிமை வழங்கினார்.

நித்தியானந்தா ஆசிரமம்

இவருக்கும் ஆசிரம நிர்வாகிகளுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருதரப்பினரும் நிலத்தை பயன்படுத்த நீதிமன்றம் தடை விதித்தது.

இந்தநிலையில் நீதிமன்ற உத்தரவை மீறி தங்கியிருந்த சீடர்களை வட்டாட்சியர் தலைமையில் காவல்துறையினர் நேற்று முன்தினம் வெளியேற்றினர்.

மேலும் ஆசிரமத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இந்தநிலையில், நள்ளிரவில் சேத்தூர் ஆசிரமத்திற்கு சென்ற மா நித்யா சாரானந்த சாமி, மா நித்ய சுத்த ஆத்மானந்தா சாமி ஆகிய இரண்டு பெண் சீடர்கள், ஆசிரமத்திற்கு அரசு அதிகாரிகள் வைத்த 'சீல்'-ஐ உடைத்து அறைக்குள் புகுந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சேத்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இருவரையும் கைது செய்ய முயன்றனர்.

நித்தியானந்தா

அப்போது பெண் சீடர்கள் இருவரும் இந்த நிலம் தங்களுக்கு தான் சொந்தம் என கூறி காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

"தன்னுடன் பேச மறுத்ததால் உயிரோடு தீ வைத்த காதலன்" - சிகிச்சை பலனின்றி இளம்பெண் உயிரிழந்த பரிதாபம்!

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகேயுள்ள இளம்புவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி காளியம்மாள். கருத்து வேறுபாடு காரணமாக காளியம்மாள் தனது கணவரை பிரிந்து தனது 2 மகன்கள் மற்றும் மகளுடன... மேலும் பார்க்க

காவலர் கொலையில் 3 பேர் சிறையில் அடைப்பு; சுடப்பட்ட குற்றவாளிக்குத் தீவிர சிகிச்சை

உசிலம்பட்டியில் போலீஸ்காரர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேரைக் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.சுடப்பட்ட பொன்வண்ணன்மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்... மேலும் பார்க்க

வீட்டில் ஸ்டூடியோ; மாடல்களுக்கு லட்சத்தில் சம்பளம்; ஆபாச வீடியோ நெட்வொர்க்கை இயக்கிய நொய்டா தம்பதி!

உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவில் சட்டவிரோதமாக ஆன்லைனில் ஆபாச வீடியோ வெளியிடப்படுவதாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நொய்டாவில் உள்ள உஜ்வால் என்பவரத... மேலும் பார்க்க

உசிலம்பட்டி போலீஸ் கொலை வழக்கு: கேரளா தப்ப முயன்ற ரௌடி சுட்டுப் பிடித்த போலீஸார் - நடந்தது என்ன?

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் தலைமைக் காவலர் முத்துக்குமார் (40). இவர் கடந்த 2009-ல் காவல்துறையில் பணிக்கு சேர்ந்து, தற்போது உசிலம்பட்டி காவல் ஆய்வாளருக்கு டிரைவராக பணிய... மேலும் பார்க்க

பிரபல ரௌடி அசோக்கைத் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸ்.. செங்கல்பட்டு வனப்பகுதியில் நடந்ததென்ன?

செங்கல்பட்டு அருகே உள்ள திருப்போரூர் பகுதியைச் சேர்ந்தவர் அசோக் (30). இவர் ஏ பிளஸ் ரௌடி. சிறையிலிருந்து வெளியில் வந்த அசோக்கை போலீஸார் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது அசோக் தலைமையிலான ரௌடி டீம், தி.மு... மேலும் பார்க்க

சென்னை: மருத்துவ மாணவிக்குப் பாலியல் தொல்லை - மாணவனைத் தேடும் போலீஸ்!

சென்னையில் உள்ள தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் எம்.டி.எஸ் 2-ம் ஆண்டு படித்து வருகிறார் 26 வயது மாணவி ஒருவர். இவர் கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், அதே கல்லூரியில் படி... மேலும் பார்க்க