செய்திகள் :

ராஜஸ்தான்: 55 வயதில் 17வது குழந்தை; கிராமத்தினரை அதிர்ச்சியடையச் செய்த பெண்மணி; பின்னணி என்ன?

post image

ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு பெண் 17 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். அங்குள்ள உதைப்பூர் மாவட்டத்தில் இருக்கும் லிலாவாஸ் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராம். இவரது மனைவி ரேகா(55). இத்தம்பதிகளுக்கு ஏற்கனவே 16 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் 4 ஆண் குழந்தை உட்பட 5 குழந்தைகள் பிறந்தவுடன் இறந்துவிட்டன்.

எஞ்சிய அனைத்து குழந்தைகளும் இருக்கின்றன. இந்நிலையில் ரேகா மீண்டும் கர்ப்பமானார். அவருக்கு ஜதோல் ஆரம்பச் சுகாதார மையத்தில் 17வது குழந்தை பிறந்திருக்கிறது. இது அவர்களின் கிராமத்தில் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

ரேகாவின் இரண்டு மகன்கள் மற்றும் 3 மகளுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. ரேகாவிற்குப் பேரப்பிள்ளைகளும் பிறந்துவிட்டன. அப்படி இருந்தும் ரேகா குழந்தை பெற்றுக்கொள்வதைக் கைவிடவில்லை. ரேகாவின் கணவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார்.

போதிய வருமானம் இல்லாத காரணத்தால் தனக்குப் பிறந்துள்ள எந்தக் குழந்தையையும் படிக்க வைக்கவில்லை. தனது பிள்ளைகளுக்குக் கூட கடன் வாங்கித்தான் திருமணம் செய்து வைத்தார். ஆனாலும் குழந்தைகள் பெற்றுக்கொள்வதை நிறுத்தவில்லை.

ரேகாவிற்குப் பிரசவம் பார்த்த மருத்துவர் ரோஷன் இது குறித்துக் கூறுகையில், ''பிரசவத்திற்கு வந்தபோது தன்னிடம் இது 4வது குழந்தை என்று தெரிவித்தார். ஆனால் அதன் பிறகுதான் அவருக்கு ஏற்கனவே 16 குழந்தைகள் பிறந்துள்ளது என்று தெரிய வந்தது. அதிகப்படியான பிரசவம் காரணமாக அவரது கர்ப்பப்பை மிகவும் பலவீனம் அடைந்துள்ளது.

அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்படவும், தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படவும் வாய்ப்பு இருந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அப்படி எதுவும் நடக்கவில்லை'' என்று தெரிவித்தார்.

குடும்பத்தினருடன் ரேகா
குடும்பத்தினருடன் ரேகா

இது குறித்து ரேகாவின் மகள் ஷீலா கூறுகையில், ''நாங்கள் ஏற்கனவே கடுமையான கஷ்டத்தில் இருக்கிறோம். எனது அம்மாவிற்கு அதிகப்படியான குழந்தைகள் இருப்பதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்'' என்றார்.

ரேகாவின் கணவர் ராம் இது குறித்துக் கூறுகையில், ''எங்களுக்குச் சொந்த வீடு கூட கிடையாது. அன்றாட செலவுகளைச் சமாளிக்கவே சிரமப்படுகிறேன். குழந்தைகளுக்குச் சாப்பாடு கொடுக்க 20 சதவீத வட்டிக்குக் கடன் வாங்குகிறேன். பல லட்சத்தைத் திரும்பக் கொடுத்திருக்கிறேன். ஆனாலும் கடனை முழுமையாக அடைக்கமுடியவில்லை'' என்று தெரிவித்தார். 

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

பூனைக்காக மினியேச்சர் நகரத்தை கட்டினாரா சீன யூடியூபர்? - வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

வீட்டில் இருக்கும் செல்லப்பிராணிகளுக்கு அதன் உரிமையாளர்கள் பல்வேறு வசதிகளை செய்து கொடுக்கின்றனர். இன்னும் சொல்லபோனால் குழந்தைகளைப் போன்று அதனை பராமரித்து வருகின்றனர். அந்த வகையில் சீன யூடிபர் ஒருவர் ப... மேலும் பார்க்க

பேத்தியின் 23 வயது வகுப்பு தோழனை விரும்பும் 83 வயது மூதாட்டி - இரு குடும்பமும் ஆதரவு என நெகிழ்ச்சி!

23 வயதான இளைஞரை 83 வயதான மூதாட்டி ஒருவர் விரும்புவதாக தெரிவித்துள்ள சம்பவம், பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. கடந்த ஆறு மாதங்களாக டேட்டிங் செய்து வரும் இவர்களின் காதல் கதை எங்கிருந்து தொடங்கியது என்ப... மேலும் பார்க்க

”எப்போதும் போல தான் இரை வைத்தேன்; ஆனால் இந்த முறை...”- நீல நிறத்தில் முட்டை இட்ட கோழி; பின்னணி என்ன?

கர்நாடகாவின் தாவணகெரே மாவட்டம் சன்னகிரி தாலுகாவில் உள்ள நெல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சையத் நூர் என்பவருக்குச் சொந்தமான கோழி நீல நிறத்தில் முட்டையிடுவதாக கூறும் புகைப்படம் இணையத்தில் வைரலாகப் பரவி வருக... மேலும் பார்க்க

சீனா: "என் கணவருடன் 5 வருடங்களாகத் தூங்கியதற்கு நன்றி" - தோழிக்கு பேனர் வைத்த மனைவி; பின்னணி என்ன?

”கணவருடன் ஐந்து வருடங்களாகத் தூங்கியதற்கு நன்றி” என்று எழுதப்பட்ட பதாகைகளைத் தொங்கவிட்டு சீனாவைச் சேர்ந்த ஒரு பெண் கவனம் பெற்றுவருகிறார்.சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஹாங்ஷானைச் சேர்ந்த ஒரு பெண் தன... மேலும் பார்க்க

கழிவறை பிரச்னையால் பாட்டில்களில் சிறுநீர் கழித்த பயணிகள்; பறக்கும் விமானத்தில் என்ன நடந்தது?

விர்ஜின் ஆஸ்திரேலியா என்ற விமானத்தில் பயணிகள் சிறுநீரைக் கழிக்க பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.பாலியில் உள்ள டென்பசார் நகரிலிருந்து ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்கு... மேலும் பார்க்க

`அனுமதியின்றி என்னைத் தொட்டார்' - நடிகை அஞ்சலி ராகவ்; மன்னிப்பு கேட்ட போஜ்புரி நடிகர்

போஜ்புரி படங்களில் நடித்து வருபவர் நடிகர் பவன் சிங். இவரும் அஞ்சலி ராகவ்வும் நடித்த பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. லக்னோவில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் பவன் சிங் தனது அனுமதி இல... மேலும் பார்க்க