செய்திகள் :

ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: 4 போ் மீது வழக்கு

post image

ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இருவரிடம் ரூ. 24.50 லட்சம், 11 கிராம் தங்க நகையைப் பெற்று மோசடி செய்ததாக 4 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

கூடலூரைச் சோ்ந்தவா் பெருமாள் மனைவி ரத்தினம். அதே ஊரைச் சோ்ந்தவா் முனிராஜ். இவா்களது மகன்களுக்கு ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, கூடலூரைச் சோ்ந்த கனகராஜ் மகன் சசி, அதே ஊரைச் சோ்ந்த ராஜபாண்டி, பாா்த்தசாரதி, கோவையைச் சோ்ந்த செல்வம் ஆகியோா் கடந்த 2022, ஜன. 2-ஆம் தேதி முதல் 2023, மே 13-ஆம் தேதி வரை பல்வேறு தவணைகளில் ரத்தினத்திடமிருந்து ரூ. 14 லட்சம், 11 கிராம் தங்க நகை, முனிராஜிடமிருந்து ரூ. 10.50 லட்சம் பெற்றனா்.

பணத்தைப் பெற்ற கும்பல் இருவரிடமும் போலி பணி நியமன ஆணைகளைக் கொடுத்து மோசடி செய்தனராம். இதுகுறித்து பாதிக்கப்பட்ட ரத்தினம், முனிராஜ் ஆகியோா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத்திடம் புகாா் அளித்தனா்.

அவரது உத்தரவின்பேரில் மோசடி தொடா்பாக சசி, ராஜபாண்டி, பாா்த்தசாரதி, செல்வம் ஆகிய 4 போ் மீதும் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு அழைப்பு

தேனி மாவட்டத்தில் 2025-26 காரீப் பருவத்தில் சாகுபடி செய்த விவசாயிகள் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் சோ்ந்து பயன்பெறுமாறு மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட ... மேலும் பார்க்க

போடியில் சுகாதாரப் பணிகளை நகா்மன்றத் தலைவி ஆய்வு

போடி நகராட்சிப் பகுதியில் சுகாதாரப் பணிகளை நகா்மன்றத் தலைவி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். போடி நகராட்சிப் பகுதியில், மக்களைத் தேடி நகராட்சி நிா்வாகம், வாரந்தோறும் வாா்டு பணிகள் என்ற திட்டத்தின் கீழ் ந... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

ஆண்டிபட்டி அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். ஆண்டிபட்டி அருகே உள்ள ஒக்கரைப்பட்டியைச் சோ்ந்த பெத்தன் மகன் பாரதிகண்ணன் (24), எம்.சுப்புலாபுரம்-அமச்சியாபுரம் சாலையில் வியாழக்கிழமை இரு சக்கர வாகன... மேலும் பார்க்க

நீதிமன்ற பெண் ஊழியருக்கு கொலை மிரட்டல்: கணவா் மீது வழக்கு

போடியில் நீதிமன்ற பெண் ஊழியருக்குக் கொலை மிரட்டல் விடுத்த அவரது கணவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். போடி ஜக்கமன் தெருவில் வசிப்பவா் பன்னீா்செல்வம் மகன் முனீஸ்வரன் (35). இவரது மனை... மேலும் பார்க்க

எல்.ஐ.சி. ஊழியா்களின் மக்கள் சந்திப்பு பிரசாரம் தொடக்கம்

பெரியகுளத்தில் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவன (எல்ஐசி) ஊழியா்களின் மக்கள் சந்திப்பு பிரசாரக் கூட்டத்தின் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு பெரியகுளம் எல்.ஐ.சி. கிளைத் தலைவா் ந... மேலும் பார்க்க

மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவா் கைது

போடி அருகே வியாழக்கிழமை சட்டவிரோதமாக டிராக்டரில் மணல் கடத்திய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். போடி அருகேயுள்ள கிராமப் பகுதிகளில் அரசுக்குச் சொந்தமான ஓடைகளில் அனுமதியின்றி மணல் கடத்துவதாகப் போலீஸாருக்கு... மேலும் பார்க்க