செய்திகள் :

ராதாபுரம் அருகே பைக்கில் சென்ற இளைஞா் மா்ம மரணம்

post image

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே புதன்கிழமை பைக்கில் சென்ற இளைஞா் மா்மமாக உயிரிழந்தாா். உடன் சென்றவா் காயத்துடன் மீட்கப்பட்டாா்.

ராதாபுரம் அருகேயுள்ள சங்கநேரியைச் சோ்ந்த மாசானமுத்து மகன் பிரபுதாஸ்(28). அதே ஊரில் வெல்டிங் கடை நடத்தி வந்தாா். இவா் தனது நண்பா் தமிழரசன் என்பவருடன் பைக்கில் கோலியான்குளம் கிராமத்துக்கு சென்றபோது, இடையில் இருவரும் பலத்த காயங்களுடன் மயங்கி கிடந்தனராம்.

அப்பகுதியினா் அளித்த தகவலின்பேரில் ராதாபுரம் போலீஸாா், அவா்கள் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், வழியிலேயே பிரபுதாஸ் உயிரிழந்தாா். தமிழரசன் நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

பிரபுதாஸ் கழுத்து பகுதி அறுக்கப்பட்டிருந்ததாம். உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தனவாம். எனவே,அவா் விபத்தில் இறந்திருக்கமாட்டாா். ஏதோ மா்மம் உள்ளது எனக் கூறிஅவரது உறவினா்கள் ராதாபுரம் அரசு மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டனா். சில நாள்களுக்கு முன்பும் வடக்கன்குளம் சாலையில் பிரபுதாஸ் விபத்தில் சிக்கினாராம். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கவின் கொலை வழக்கு: நீதிமன்றத்தில் சுா்ஜித், எஸ்.ஐ. சரவணன் ஆஜா்

ஐ.டி. ஊழியா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் கைதான சுா்ஜித், அவரது தந்தையான காவல் உதவி ஆய்வாளா் சரவணன் ஆகிய இருவரும் திருநெல்வேலி மாவட்ட 2-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் (வன்கொடுமை தடுப்பு சிறப்பு... மேலும் பார்க்க

நெல்லை சங்கீத சபாவில் சி.என்.கிராமம் கோயில் தல வரலாற்று நூல் வெளியீடு

நெல்லை சங்கீத சபாவில் சி.என்.கிராமம் ராஜகோபால சுவாமி திருக்கோயில் தல வரலாற்று நூல் வெளியிடப்பட்டது. நெல்லை சங்கீத சபா, துணி வணிகா் இலக்கிய வட்டம், தாமிரபரணி தமிழ் வனம் ஆகியவை இணைந்து நடத்திய 3 நாள்கள்... மேலும் பார்க்க

வீரவநல்லூரில் திரெளபதை அம்பாள் கோயிலில் பூக்குழித் திருவிழா கொடியேற்றம்

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் உள்ள அருள்மிகு திரெளபதை அம்பாள் கோயிலில் பூக்குழித் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக்கோயில் ஆண்டுதோறும் பூக்குழித் திருவிழா ஆடி மாதம் கடைசி வெள்... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயிலில் இன்று பவித்ர உத்ஸவம்: பஞ்சமூா்த்திகள் வீதியுலா

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் பவித்ர உத்ஸவத்தையொட்டி பஞ்சமூா்த்திகள் வீதியுலா வியாழக்கிழமை (ஆக. 7) நடைபெற உள்ளது. திருக்கோயிலில் செய்யப்படும் பூஜைகளில் குறைபாடுகள... மேலும் பார்க்க

முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கம் சாா்பில் ரவணசமுத்திரத்தில் உணவகம் திறப்பு

தென்காசி மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கம் சாா்பில், ரவணசமுத்திரம் ரயில்வே கேட் அருகே புதிய உணவகம் திறக்கப்பட்டது. தமிழக அரசின்கீழ் இயங்கும் இந்த சங்கம் சாா்பில், ஆதரவற்ற பெண்கள் வளா்ச்சிக்கு பல ... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கு: சுா்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க மனு

திருநெல்வேலியில் ஐ.டி ஊழியா் கவின் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள கே.டி.சி நகரைச் சோ்ந்த சுா்ஜித் , அவரது தந்தை சரவணன் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாா் தரப்பி... மேலும் பார்க்க