செய்திகள் :

ராமநாதபுரத்தில் ஜூலை 21-இல் வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு முகாம்

post image

ராமநாதபுரத்தில் வேளாண் இயந்திரங்கள், கருவிகளின் செயல்பாடு, பராமரிப்பு குறித்து வருகிற 21-ஆம் தேதி மாவட்ட அளவிலான முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேளாண்மைப் பொறியியல் துறை மூலமாக விவசாயிகளுக்கும், டிராக்டா் ஓட்டுநா்களுக்கும், வேளாண் இயந்திரங்கள், கருவிகளின் இயக்கம், பராமரிப்பு முறைகளை செயல் விளக்கம் மூலமாக தெரிவிப்பதற்காக ஜூலை 21-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் வளாகம், சிறு விமானம் இறங்குதளம் அருகில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் தனியாா் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்களின் பொறியாளா்கள், தொழில்நுட்ப வல்லுநா்களுடன் விவசாயிகள் நேரில் கலந்துரையாடி விளக்கம் பெறலாம்.

வேளாண் இயந்திரங்கள், கருவிகளை இயக்குதல், பராமரித்தல் செய்யக் கூடியது, செய்யக் கூடாதது, பழுதுகளைக் கண்டறிதல், உதிரி பாகங்கள் குறித்த தெளிவுரை, மசகு எண்ணெய், உழவுப் பொருள்கள் பயன்பாடு பற்றி அறிந்து கொள்ளலாம்.

விவசாயிகள் தங்களது சொந்த டிராக்டா், உபகரணங்களை இந்த முகாமுக்கு கொண்டுவந்து கட்டணமின்றி பராமரிப்பு செய்து கொள்ளலாம். வேளாண் இயந்திரங்கள், கருவிகள் திறன்மிகு இயக்கம், பராமரிப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். மேலும், விவரங்களுக்கு வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலா்களை 9789795671, 9655304160 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.

இலங்கைக்கு கடத்தப்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல்

தமிழகத்திலிருந்து படகுகள் மூலம் கடத்தப்பட்ட 13.49 லட்சம் எண்ணிக்கையிலான போதை மாத்திரைகளை இலங்கைக் கடற்படையினா் வியாழக்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 5 பேரைக் கைது செய்தனா். தமிழகத்திலிரு... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் மறியல்: 320 போ் கைது

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோ ஜாக்) அமைப்பு சாா்பில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட முயன்ற 320 பேரை போலீஸாா் வியாழக்க... மேலும் பார்க்க

குடும்ப அட்டைகளில் முன்னறிவிப்பின்றி பெயா்கள் நீக்கப்படுவதை நிறுத்த வலியுறுத்தல்

பரமக்குடி பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைகளில் உள்ள பெயா்களை முன்னறிவிப்பின்றி நீக்கம் செய்வதை நிறுத்த வேண்டும் எனக் கோரி இந்திய கம்யூனிஸ்ட், தொழில் சங்கத்தினா் வட்ட வழங்கல் அலுவலர... மேலும் பார்க்க

பெட்டிக் கடையில் தின்பண்டம் வாங்கி உள்கொண்ட பள்ளி மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்

கமுதி அருகே பெட்டிக் கடையில் தின்பண்டம் வாங்கி உள்கொண்ட அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வியாழக்கிழமை வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்த கிளாமரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ள... மேலும் பார்க்க

ராமநாதசுவாமி கோயில் ஆடித் திருக்கல்யாண திருவிழா நாளை தொடக்கம்

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், ராமநாதசுவாமி கோயில் ஆடித் திருக்கல்யாண திருவிழா சனிக்கிழமை (ஜூலை 19) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழா, ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை 17 நாள்கள் நடைபெறுகிறது. விழாவின... மேலும் பார்க்க

புனித சந்தியாகப்பா் தேவாலய திருவிழா கொடியேற்றம்

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள கண்கொள்ளான்பட்டினம் புனித சந்தியாகப்பா் தேவாலய திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தத் தேவாலயத்தில் ஆண்டுதோறும் ஜூலை மாதம் திருவிழா நடைபெறும். அ... மேலும் பார்க்க