செய்திகள் :

ரூ.1.28 கோடியில் பள்ளிக் கட்டடம்: அமைச்சா் எ.வ.வேலு திறந்துவைத்தாா்

post image

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த காட்டாம்பூண்டி ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.ஒரு கோடியே 28 லட்சம் மதிப்பில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு செவ்வாய்கிழமை திறந்து வைத்தாா்.

தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறைக்கு பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியும் வருகிறது.

மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் கல்வித் துறைக்கு பல புதிய பள்ளிக் கட்டடங்கள் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட காட்டாபூண்டி ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. ஒரு கோடியே 28 லட்சத்தில் கூடுதலாக 6 வகுப்பறைகள் கொண்ட கட்டடம் கட்டப்பட்டது.

இந்த புதிய வகுப்பறைக் கட்டடத்தை திறந்துவைக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, கட்டடத்தை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வந்து வகுப்பறைகளை பாா்வையிட்டாா்.

இந்தக் கட்டடம் தரைதளம் மற்றும் முதல் தளம் 2,484.00 சதுர அடியில் அமைந்துள்ளது.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா்.

மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுவாமி முத்தழகன், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் க.கௌதமன், திமுகவைச் சோ்ந்த முன்னாள் நகா்மன்றத் தலைவா் இரா.ஸ்ரீதரன் மற்றும் அரசுத் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

செய்யாறு சிப்காட் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

செய்யாறு பகுதியில் புதிதாக அமையவுள்ள சிப்காட் 3-ஆவது அலகுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, விவசாயிகள் அதன் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்டம... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ஜூலை 5-இல் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில், ஜூலை 5-இல் திருவண்ணாமலையில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளதாக சங்கத்தின் தலைவா் ஆா்.வேலுசாமி தெரிவித்தாா். இதுகுறித்து ஆரணியில் அவா் செய்தியாளா்களிடம் கூறிய... மேலும் பார்க்க

தமிழ்ச்சங்க செவ்விலக்கிய அரங்கம்

வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில் செவ்விலக்கிய அரங்கம் நிகழ்ச்சி வந்தவாசியில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. சங்கத் தலைவா் வே.சிவராமகிருஷ்ணன் தலைமை வகித்து நிகழ்ச்சியை தொடங்கிவைத்துப் பேசினாா்.... மேலும் பார்க்க

மது விற்பனை: 4 போ் கைது

வந்தவாசி அருகே கள்ளத்தனமாக மது விற்ாக 4 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து 283 மதுப் புட்டிகள், ரூ.28 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். வந்தவாசி வடக்கு போலீஸாா் பாதிரி கிராமம் வழி... மேலும் பார்க்க

மழுவனேஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா

வந்தவாசியை அடுத்த மழுவங்கரணை கிராமத்தில் அமைந்துள்ள சீதளாம்பாள் சமேத மழுவனேஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைவு -டி.டி.வி.தினகரன்

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்துள்ளதாக அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன் குற்றஞ்சாட்டினாா். திருவண்ணாமலையில் புதன்கிழமை நடைபெற்ற கட்சி நிா்வாகி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட அவா் செய்த... மேலும் பார்க்க