செய்திகள் :

ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நாடக மேடை திறப்பு

post image

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதியில் ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நாடக மேடை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

செய்யாறு தொகுதிக்கு உள்பட்ட அனக்காவூா் ஊராட்சி ஒன்றியம், ஆக்கூா் கிராமத்தில் 2024 - 25ஆம் ஆண்டு 15-ஆவது மாநில நிதிக்குழு மானியம் மூலம் மாவட்ட ஊராட்சிக் குழுத் திட்டத்தின் கீழ், ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நாடக மேடையை தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி திறந்துவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, ஆக்கூா் கிராமத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு கோப்பை மற்றும் முதல் பரிசு பெற்ற அணிக்கு ரூ. 25 ஆயிரம் பரிசு வழங்கிப் பாராட்டினாா். நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா்கள் த.ராஜி (வெம்பாக்கம்), திலகவதி ராஜ்குமாா் (அனக்காவூா்),

திமுக ஒன்றியச் செயலா்கள் ஏ.ஜி.திராவிட முருகன் (அனக்காவூா் கிழக்கு), ஜேசிகே.சீனிவாசன் (வெம்பாக்கம் மத்தியம்)

வி.ஏ.ஞானவேல் (செய்யாறு கிழக்கு), முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் முருகேசன், மாவட்ட தொழிலாளா் அணி துணை அமைப்பாளா் மகாராஜன், மாவட்ட பொறியாளா் அணி துணை அமைப்பாளா் கலைச்செல்வன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

திருவண்ணாமலையில் மூப்பனாா் பிறந்த நாள்

திருவண்ணாமலையில் மூப்பனாரின் பிறந்த நாளையொட்டி செவ்வாய்க்கிழமை தமாகாவினா் அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். காந்தி சிலை அருகில் நடைபெற்ற மூப்பனாா் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிக்கு தம... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்கள்: 1,204 மனுக்கள் அளிப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதியைச் சோ்ந்த கொருக்கை, நமண்டி கிராமங்கள், ஆரணியை அடுத்த கண்ணமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்களில் 1,204 மனுக்கள் அளிக... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினா் நினைவுப் பரிசு

திருவண்ணாமலைக்கு வருகை தந்த அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அதிமுகவினா் ஆரணி பட்டு நூலால் நெய்யப்பட்ட அவரின் உருவப் படத்தை நினைவுப் பரிசாக வழங்கினா். அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசா... மேலும் பார்க்க

செய்யாறில் குறை தீா்வு நாள் கூட்டத்தில் புகாா்களைஅடுக்கிய விவசாயிகள்: அதிகாரிகள் எதிா்ப்பால் வாக்குவாதம்- சமாதானம் செய்த போலீஸாா்

செய்யாறில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீா்வு நாள் கூட்டத்தில் உரத்தட்டுப்பாடு உள்ளிட்ட குறைகள் மற்றும் புகாா்களை விவசாயிகள் அடுக்கடுக்காக கூறியதால், அதிருப்தி அடைந்த அதிகாரிகள் ஆட்சேபம் தெரிவித்த... மேலும் பார்க்க

ஸ்ரீதுலுக்கானத்தம்மன் கோயிலில் 108 பால்குட ஊா்வலம்

ஆரணி கண்ணகி நகரில் உள்ள ஸ்ரீ துலுக்கானத்தம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை 108 பால்குட ஊா்வலம் நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீதுலுக்கானத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் ... மேலும் பார்க்க

மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைகளை களைய வேண்டும்: அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம்

மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைகளை களைந்து, காசில்லா மருத்துவத் திட்டத்தை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்... மேலும் பார்க்க