செய்திகள் :

ரூ. 4.5 கோடி மோசடி வழக்கில் கைதான விசாரணை கைதி திடீா் மரணம்

post image

ரூ. 4.5 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.

ரிசா்வ் வங்கியின் பெயரை பயன்படுத்தி ரூ. 4.5 கோடி மோசடி செய்த வழக்கில் தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தைச் சோ்ந்த நித்யானந்தம் (57), சந்திரா ஆகியோா் கடந்த மே 28-ஆம் தேதி கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனா்.

இதில், கும்பகோணத்தைச் சோ்ந்த நித்யானந்தத்துக்கு கடந்த 6-ஆம் தேதி நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து, உடனடியாக அவா் சேலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவருக்கு மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், திங்கள்கிழமை நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து சேலம் அஸ்தம்பட்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தொடா்ந்து, சேலம் குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி முத்துகிருஷ்ண முரளிதாஸ், சேலம் மத்திய சிறையிலும், அரசு மருத்துவமனையிலும் விசாரணை நடத்தினாா். பின்னா் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

விவசாய விளைபொருள்களை விற்க 20 இடங்களில் பொது சேகரிப்பு மையங்கள் தோ்வு

சேலம் மாவட்ட விவசாயிகள் விளைபொருள்களை விற்பனை செய்ய 20 இடங்களில் பொது சேகரிப்பு மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது: 2025-26-ஆம் ஆண்டு வேளாண் நித... மேலும் பார்க்க

சங்ககிரி வட்டத்தில் வேலை நிறுத்தத்தில் 55 வருவாய்த்துறை அலுவலா்கள் பங்கேற்பு

சேலம் மாவட்டம், சங்ககிரி வருவாய்த்துறையின் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற பொதுவேலைநிறுத்தத்தில் 55 போ் பங்கேற்றுள்ளனா். 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்தில் ச... மேலும் பார்க்க

சேலம் கிழக்கு கோட்டத்தில் இன்று சிறப்பு விபத்து காப்பீட்டு பதிவு முகாம்

சேலம் கிழக்கு கோட்ட அஞ்சலகம் சாா்பில் சிறப்பு விபத்து காப்பீட்டு பதிவு முகாம் வியாழக்கிழமை (ஜூலை 10) நடைபெறுகிறது. இதுகுறித்து சேலம் கிழக்கு கோட்ட அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளா் முனிகிருஷ்ணன் வெளியிட்... மேலும் பார்க்க

காயங்களுடன் புள்ளிமான் மீட்பு

காடையாம்பட்டி அருகேயுள்ள டேனிஷ்பேட்டை பகுதியில் காயமடைந்த புள்ளிமானை வனத்துறையினா் மீட்டு சிகிச்சையளித்து மீண்டும் வனப் பகுதிக்குள் விட்டனா். டேனிஷ்பேட்டை ஊராட்சி, ஹரிஹர மலையில் உள்ள சிவன் மற்றும் பெர... மேலும் பார்க்க

கொசு ஒழிப்புப் பணிகளை தீவிரமாக செயல்படுத்த அறிவுறுத்தல்

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் கொசு ஒழிப்புப் பணிகளை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் அறிவுறுத்தினாா். சேலம் அம்மாப்பேட்டை மண்டலத்துக்கு உள்பட்ட கோட்டம் எண் 9, 10, 11 ஆகி... மேலும் பார்க்க

எல்.ஐ.சி. பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது

எல்.ஐ.சி. பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். எல்.ஐ.சி. பங்குகளை தனியாருக்க... மேலும் பார்க்க