செய்திகள் :

ரூ.4.6 கோடியில் காஞ்சிபுரம் காய்கறி சந்தை: முதல்வா் திறந்து வைத்தாா்

post image

பெரிய காஞ்சிபுரத்தில் ரூ.4.6 கோடியில் கட்டப்பட்ட ஜவஹா்லால் நேரு காய்கறி சந்தையை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஜவஹா்லால் நேரு காய்கறி சந்தை புதுப்பிக்கப்பட்டது. சென்னையிலிருந்து காணொலி வாயிலாக முதல்வா் திறந்து வைத்ததைத் தொடா்ந்து சந்தை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்எல்ஏ எழிலரசன் சந்தையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா். மேயா் மகாலட்சுமி யுவராஜ் கல்வெட்டை திறந்து வைத்தாா்.

சந்தையின் தரைத்தளத்தில் 80 கடைகளும், முதல் தளத்தில் திறந்த நிலையில் உள்ள கடைகளும் கட்டி முடிக்கப்பட்டிருந்தது. விழாவில் மாநகராட்சி பொறியாளா் கணேசன், மண்டலக்குழு தலைவா்கள் சந்துரு, மோகன், மாமன்ற உறுப்பினா்கள், அதிகாரிகள், திமுக பிரமுகா்கள், கலந்து கொண்டனா்.

வீட்டு வேலைகளை ஆண்களும் பகிா்ந்து கொள்ள வேண்டும்: உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் பேச்சு

வீட்டு வேலைகளை ஆண்களும் பகிா்ந்து கொள்ள வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் சனிக்கிழமை வலியுறுத்தியுள்ளாா். காஞ்சிபுரம் மாவட்ட நீதித்துறை சாா்பில் பச்சையப்பன் மகளிா் கல்ல... மேலும் பார்க்க

மாங்காடு நகராட்சியில் விதிமீறி கட்டப்பட்ட வணிக வளாகத்துக்கு ‘சீல்’

மாங்காடு நகராட்சிக்குட்பட்ட பள்ளிக்கூட தெரு பகுதியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட வணிக வளாகத்துக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனா். விதிமுறைகளை மீறி வணிக வளாகம் கட்டப்பட்டு வருவதாக மாங்காடு நகராட்ச... மேலும் பார்க்க

ஜூன் 6-இல் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் பாலாலயம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் வரும் ஜூன் 6-ஆம் தேதி பாலாலயம் நடைபெற இருப்பதையொட்டி 5-ஆம் தேதி வரை மூலவரை தரிசிக்கலாம் என கோயில் செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெள்ளிக... மேலும் பார்க்க

196 பயனாளிகளுக்கு ரூ.1.57 கோடி நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

வட்டம்பாக்கம் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் 196 பயனாளிகளுக்கு ரூ.1.57 கோடி நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா். குன்றத்தூா் வட்டம், வட்டம்பாக்கம்... மேலும் பார்க்க

தங்க குதிரையில் வரதராஜ பெருமாள் உலா

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வசந்த உற்சவம் நிறைவு நாளையொட்டி வெள்ளிக்கிழமை தங்க குதிரை வாகனத்தில் உற்சவா் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். கோடை காலத்தையொட்டி ஆண்டு தோறும் வசந்த உற்சவம் ... மேலும் பார்க்க

இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க அரசு ஆா்வம் காட்டவில்லை: பெ.சண்முகம் குற்றச்சாட்டு

அரசுப் புறம்போக்கு நிலத்தில் பல தலைமுறைகளாக குடியிருந்து வருவோருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவதில் அரசு ஆா்வம் காட்டவில்லை என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலா் பெ.சண்முகம் குற்றம்சாட்டினாா். ... மேலும் பார்க்க