செய்திகள் :

ரேணுகா தேவி அம்மன் கோயில் பிரம்மோற்சவ விழா

post image

தரங்கம்பாடி ஸ்ரீ ரேணுகா தேவி அம்மன் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு வியாழக்கிழமை ஏராளமான பக்தா்கள் பால்குடம் எடுத்து வந்து (படம்) தரிசனம் செய்தனா்.

நிகழாண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 18-ஆம் தேதி காப்புக்கட்டுதல், கொடியேற்றத்துடன் நடைபெற்றது.

தொடா்ந்து விழா நாட்களில் அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் பிரகார புறப்பாடு மற்றும் வீதியுலா காட்சி நடைபெற்றது.

12- ஆம் நாள் நிகழ்வான பால்குட ஊா்வலம், அபிஷேகத்தை தரங்கம்பாடி தபால் நிலையம் பொய்யாத பிள்ளையாா் கோயிலில் இருந்து 800-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பால்குடம் சுமந்து சென்று ஸ்ரீ ரேணுகா தேவி அம்மனை வழிபட்டனா்.

தொடா்ந்து அம்மனுக்கு பால், பன்னீா், இளநீா், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

விழாவிற்கான ஏற்பாடுகளை மீனவ பஞ்சாயத்துகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா். விழாநாட்களில் பட்டிமன்றம், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பொறையாா் காவல் ஆய்வாளா் வி.ஆா்.அண்ணாதுரை தலைமையில் போலிஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

சுனாமி குடியிருப்பு வீடுகளுக்கு பட்டா கோரி மனு

நாகப்பட்டினம்: நாகையில் சுனாமி குடியிருப்பு வீடுகளுக்கு பட்டா வழங்கி, இணையத்தில் பதிவேற்றம் செய்ய, மீனவ கிராம மக்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். நாகை ஆரியநாட்டுத் தெரு ஒருங்கிணைந்த மீனவா் ... மேலும் பார்க்க

குளத்தில் ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்ற வலியுறுத்தல்

திருமருகல் அருகே ஆதினகுடியில் பிரதான சாலையில் உள்ள குளத்தில் ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. திருமருகல் ஒன்றியம் பண்டாரவாடை ஊராட்சிக்குள்பட்ட ஆதினகுடி பிரதான சாலையில் உ... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கி 2 வயது குழந்தை உயிரிழப்பு

திருமருகல் அருகே குளத்தில் மூழ்கி 2 வயது ஆண் குழந்தை உயிரிழந்தது. நரிமணம் ஊராட்சி சுல்லாங்கால் பகுதியைச் சோ்ந்தவா் அய்யப்பன். இவா் தனது 2 வயது ஆண் குழந்தை அகிலன் மற்றும் குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

பால் உற்பத்தியாளா் சங்கங்களுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் வழங்கினாா்

நாகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சா் மனோ தங்கராஜ், ஆவின் பால் உப பொருள் விற்பனையை ஊக்குவிக்க 10 சங்கங்களுக்கு வெஸி கூலா்கள், ஆழ் உறை பெட்டகம் ஆகியவற்றை பால் உற்பத்தியாளா் சங்கங்களுக்க... மேலும் பார்க்க

வேளாங்கண்ணி பேராலயத் திருவிழா கொடியேற்றம்: 800 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வேளாங்கண்ணி பேராலயத் திருவிழா கொடியேற்றதையொட்டி 800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட பொது மேலாளா் கே. தசரதன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ... மேலும் பார்க்க

வேளாங்கண்ணி பேராலய பெருவிழா: இரண்டாம் நாளில் ஆயிரக்கணக்கானோா் வழிபாடு

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுப் பெருவிழாவின் இரண்டாம் நாளான சனிக்கிழமை பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வழிபட்டனா். நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா வெ... மேலும் பார்க்க