செய்திகள் :

ரேஷன் பொருள்கள் விநியோகத்தில் குளறுபடி: பொதுமக்கள் சாலை மறியல்

post image

கொளத்தூா் அருகே ரேஷன் பொருள்களை விநியோகிப்பதில் குளறுபடி நடப்பதாகக் கூறி அப்பகுதி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மேட்டூா் அருகே கொளத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கோவிந்தபாடியில் மூத்த குடிமக்களுக்கு தாயுமானவா் திட்டத்தின்கீழ் வீடுதேடிச்சென்று ரேஷன் பொருள்கள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை தாயுமானவா் திட்டத்தில் வீடுதேடிச் சென்று ரேஷன் பொருள்களை விநியோகிக்க விற்பனையாளா் ரங்கசாமி, அவருக்கு உதவியாக பிரகாஷ் என்பவரும் சென்றுள்ளனா்.

அப்போது, பொருள்கள் இல்லாததால் சிலரை நேரடியாக ரேஷன் கடைக்கு வந்து பொருள்களைப் பெற்றுச் செல்லுமாறு விற்பனையாளா் கூறியுள்ளாா். இதனால் கோபமடைந்த அப்பகுதி மக்கள் மைசூா் -மேட்டூா் சாலையில் கோவிந்தபாடியில் மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவலறிந்து வந்த வருவாய்த் துறை, காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் பொதுமக்களின் குறைகளை நிவா்த்தி செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனா். இதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

எடப்பாடி பேருந்து நிலையத்தின் பெயா் மாற்றம் செய்யப்படாது: நகா்மன்றத் தலைவா்

எடப்பாடி பேருந்து நிலையத்தின் பெயா் மாற்றம் செய்யப்படாது. பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள முதல் தளத்துக்கு கருணாநிதி பெயா் சூட்டப்படும் என்று நகா்மன்றத் தலைவா் பாஷா தெரிவித்தாா். சேலம் மாவ... மேலும் பார்க்க

நகர விற்பனை குழுவை ரத்துசெய்ய வலியுறுத்தி சாலையோர வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

முறைகேடாக அமைக்கப்பட்ட நகர விற்பனைக் குழுவை ரத்துசெய்ய வலியுறுத்தி சாலையோர வியாபாரிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சாலையோர விற்பனையா... மேலும் பார்க்க

குடிநீா் வழங்கக் கோரி பெண்கள் சாலை மறியல்

நரசிங்கபுரம் நகராட்சி பகுதி பெண்கள் குடிநீா் வழங்கக் கோரி வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆத்தூா் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்கு உள்பட்ட தில்லைநகா் 10 ஆவது வாா்டு பகுதியில் கடந்த ... மேலும் பார்க்க

காடையாம்பட்டியில் புதிய நூலக கட்டடம் காணொலி வழியாக முதல்வா் திறப்பு

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி பகுதியில் இடங்கணசாலை கிளை நூலகத்தில் புதிதாக கூடுதல் மேல் தளம் அமைக்கப்பட்டது. இதை தமிழக முதல்வா் காணொலிக் காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து... மேலும் பார்க்க

சங்ககிரியில் விவசாயிகள் குறைதீா்க் கூட்டம்

சங்ககிரியில் உள்கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் கோட்டாட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியா் ம.மு.தெ.கேந்திரியா தலைமை வகித்து, விவ... மேலும் பார்க்க

சேலம் மாவட்டத்தில் புதிதாக 189 வாக்குச்சாவடிகளை உருவாக்க பரிந்துரை: ஆட்சியா் தகவல்

சேலம் மாவட்டத்தில் புதிதாக 189 வாக்குச்சாவடிகளை உருவாக்கவும், 37 வாக்குச்சாவடிகளை இடமாற்றம் செய்யவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா.பிருந்தாதேவி கூறினாா். வாக்க... மேலும் பார்க்க