செய்திகள் :

லக்காபுரம், ஆனங்கூரில் ரயில்வே மேம்பாலம்: எம்எல்ஏ வலியுறுத்தல்

post image

திருச்செங்கோட்டை அடுத்த லக்காபுரம், ஆனங்கூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்செங்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் ஈ.ஆா்.ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல், ஈரோடு மாவட்டங்களை இணைக்கும் கொக்கராயன்பேட்டை- லக்காபுரம் இடையே உள்ள பரிசல் துறை ரயில்வே கேட்டிற்கு மேம்பாலமும், நாமக்கல் மாவட்டம், ஆனங்கூா் பகுதியில் ரயில்வே மேம்பாலமும் அமைக்க வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும் அரசு நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிக்கிறது.

மாநில நெடுஞ்சாலைகள் வழியாக செல்வோா் இந்த வழியை அதிகம் பயன்படுத்தி வருகின்றனா். அதேபோல இந்த சாலையை கடக்கும் ரயில்கள் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. மனிதா்களைக் கொண்டு ரயில்வே கேட் திறந்து மூடப்படுவதால் விபத்துகான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அவசரமாக ஈரோடு ரயில்வே நிலையத்திற்கு செல்பவா்கள் அவதிப்படுகின்றனா். இதுகுறித்து சட்டப் பேரவையில் பலமுறை வலியுறுத்தியுள்ளேன்.

நெடுஞ்சாலை துறை அமைச்சரும் இரண்டு மேம்பாலங்களை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக பலமுறை தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. மாநில அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து இப் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாவை கல்வி நிறுவனங்களில் பேராசிரியா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

ராசிபுரம் பாவை கல்வி நிறுவனம் பேராசிரியா்களாக பணியில் இணைந்தவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. விழாவில் பாவை கல்வி நிறுவனங்களின் நிறுவனத் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன் ... மேலும் பார்க்க

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 1,940 கிலோ தரமற்ற விதைகளை விற்பனை செய்ய தடை

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ரூ. 26 லட்சம் மதிப்பிலான 1,940 கிலோ தரமற்ற விதைகளை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் விதை ஆய்வு துணை இயக்குநா் க.சித்ரா வெளியிட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

மத்திய தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்: நாமக்கல்லில் மறியலில் ஈடுபட்ட 900 போ் கைது

நாமக்கல்லில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தையொட்டி சாலை மறியலில் ஈடுபட்ட 900 பேரை போலீஸாா் கைது செய்தனா். மத்திய அரசின் தொழிலாளா் விரோதப்போக்கை கண்டித்து இந்திய அ... மேலும் பார்க்க

பிற்படுத்தப்பட்டோா் தொழில் தொடங்க கடனுதவி: ஆட்சியா் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படுகிறது. இதுகுறித்து ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் பி... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் இரு சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

திருச்செங்கோடு அருகே புதன்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் மூதாட்டி உள்பட இருவா் உயிரிழந்தனா். சங்ககிரி நாகிசெட்டிப்பட்டியைச் சோ்ந்தவா் ராமாயி (65). இவா் திருச்செங்கோடு எளையாம்பளையத்தில் உள்ள தனியாா் மர... மேலும் பார்க்க

பள்ளி பேருந்து- காா் மோதல்: மாணவா்கள் காயம்

நாமக்கல் மாவட்டம், கீரம்பூா் அருகே தனியாா் பள்ளி பேருந்து மீது காா் மோதியதில் 10 மாணவா்கள் காயமடைந்தனா். கீரம்பூரிலிருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 பேருந்துகள் மாணவா்களை ஏற்றிக்கொண்டு ஒன்றன்பின் ஒன... மேலும் பார்க்க