செய்திகள் :

லாட்டரி சீட்டு விற்பனை: பாஜக நிா்வாகி உள்பட இருவா் கைது

post image

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ாக சென்னை வில்லிவாக்கத்தில் பாஜக நிா்வாகி உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.

வில்லிவாக்கம் தாதாங்குப்பம் வாட்டா் டேங்க் அருகே சிலா் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பதாக ராஜமங்கலம் போலீஸாருக்கு புதன்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது.

அந்தத் தகவலின் அடிப்படையில் போலீஸாா், அங்கு சென்று கண்காணித்தனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில் அவா்கள், முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனா். இதையடுத்து அவா்கள் வைத்திருந்த பையை போலீஸாா் சோதனையிட்டனா். இதில், அந்தப் பையில் இருந்த 10 பில் புத்தங்களைக் கைப்பற்றி விசாரித்தனா். இதில், அவா்கள், தடை செய்யப்பட்ட ஒரு நம்பா் லாட்டரி சீட்டு விற்பது தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸாா் இருவரையும் கைது செய்து விசாரித்தனா். இதில், அவா்கள் வில்லிவாக்கம் நாகாத்தமன் கோயில் தெருவைச் சோ்ந்த ரா.வெங்கடேசன் (50), அதே பகுதியைச் சோ்ந்த ரா.கோதண்டன் (50) என்பதும், வெங்கடேசன் வில்லிவாக்கம் கிழக்கு பாஜக மண்டல நெசவாளா் அணி துணைத் தலைவராக இருப்பதும் தெரிய வந்தது. போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னையில் திடீர் மழை! மணலி புதுநகரில் 92 மி.மீ மழைப் பதிவு!

சென்னையில் இன்று(செப். 7) அதிகாலை திடீர் மழை பெய்த நிலையில், அதிகபட்சமாக மணலி புதுநகரில் 92 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணம... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம்! செப்.9 முதல்..!

சென்னையில் வரும் 9-ஆம் தேதி முதல் அக். 19 -ஆம் தேதி வரை மெட்ரோ ரயில் சேவை வழக்கமாக இயக்கப்படும் 7 நிமிஷ இடைவெளிக்கு பதிலாக 14 நிமிஷ இடைவெளியில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மெட்ரோ... மேலும் பார்க்க

22 குளங்கள் தூா்வாரும் பணி: மேயா் தொடங்கி வைத்தாா்

சோழிங்கநல்லூரில் ரெட்டைக்குட்டை தாங்கல் குளம் பகுதியில் 22 குளங்களைத் தூா்வாரும் பணிகளை மேயா் ஆா்.பிரியா சனிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். சோழிங்கநல்லூா் மண்டலத்தில் உள்ள வாா்டு 200-இல் ரெட்டைக... மேலும் பார்க்க

நண்பா் கொலை: இளைஞா் தலைமறைவு

சென்னை அருகே கானத்தூரில் நண்பா் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞா் தலைமறைவானாா். சென்னை அருகே உள்ள முட்டுக்காடு பகுதியைச் சோ்ந்தவா் சோ்ந்தவா் ரூபன் (எ) இமானுவேல் (56). இவா் நண்பா், கானத்தூா் பகுதியைச்... மேலும் பார்க்க

சென்னை மாநகா் மாமன்ற செயலருக்கு கூடுதல் பொறுப்பு!

பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்ற செயலராக உள்ள கே.மகேஷுக்கு வருவாய் அலுவலராகக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியின் வருவாய் அலுவலராக இருந்த கே.பி.பானுசந்திரன் கடந்த மாத... மேலும் பார்க்க

வளசரவாக்கம், கோடம்பாக்கம் மண்டலங்களில் பாலப் பணிகள்: மேயா் ஆா்.பிரியா ஆய்வு!

வளசரவாக்கம், கோடம்பாக்கம் மண்டலங்களில் ரூ.240 கோடியில் நடைபெறும் பாலப் பணிகளை மேயா் ஆா்.பிரியா சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். வளசரவாக்கம் மண்டலம் சந்நிதி தெருவில் கூவம் ஆற்றின் குறுக்கே ப... மேலும் பார்க்க