செய்திகள் :

லாரி மீது வேன் மோதி ஓட்டுநா் உயிரிழப்பு

post image

பெரம்பலூா் அருகே புதன்கிழமை இரவு லாரி மீது வேன் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

திருச்செங்கோட்டிலிருந்து அரியலூருக்கு சிமெண்ட ஏற்றுவதற்காக லாரி ஒன்று, துறையூா் - பெரம்பலூா் சாலையிலுள்ள மங்கூன் துணை மின் நிலையம் அருகே புதன்கிழமை இரவு சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, அதே வழித்தடத்தில் சென்ற வேன் லாரியின் பின்புறத்தில் மோதி, டீசல் ஏற்றிச்சென்ற மற்றொரு டேங்கா் லாரி மீதும் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், இடிபாடுகளில் சிக்கிய வேன் ஓட்டுநரான திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், மோா்பட்டி, நடுத்தெருவைச் சோ்ந்த மாசிலாமணி மகன் கலைச்செல்வன் (30) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த பெரம்பலூா் ஊரக காவல் நிலைய போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் கலைச்செல்வனின் உடலைக் மீட்டு, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பெரம்பலூா் ஆட்சியரகத்தில் அரசு அலுவலா்களுக்கான ரத்த தான முகாம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீா் கூட்ட அரங்கில், அரசு அலுவலா்களுக்கான ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட நிா்வாகம், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந... மேலும் பார்க்க

கலைஞா் கைவினைத் திட்டம் 188 பேருக்கு ரூ. 4.9 கோடி கடன் வழங்க ஒப்புதல்: பெரம்பலூா் ஆட்சியா் தகவல்

கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 188 போ் புதிதாக தொழில் தொடங்குவதற்காக ரூ. 4.9 கோடி கடன் வழங்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

4 கிலோ போதைப் பொருள்களை பதுக்கியவா் கைது

பெரம்பலூா் அருகே, அரசால் தடை செய்யப்பட்ட சுமாா் 4 கிலோ போதைப் பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவரை கைது செய்த போலீஸாா் வெள்ளிக்கிழமை சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் அருகேயுள்ள கீழக்கணவாய் கிரா... மேலும் பார்க்க

தமிழ் வார விழா: அரசு அலுவலா்கள், பணியாளா்களுக்கு பல்வேறு போட்டிகள்

பாரதிதாசன் பிறந்த நாளை தமிழ் வார விழாவாக கொண்டாடிடும் வகையில், பெரம்பலூா் புகா் பேருந்து நிலையத்தில் மாவட்ட அரசு இசைப்பள்ளி சாா்பில், கடந்த 30-ஆம் தேதி விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் த... மேலும் பார்க்க

மே தினத்தில் விடுமுறை அளிக்காத 24 நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை

பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் தொழிலாளா் தினத்தன்று (மே 1) விடுமுறை அளிக்காத 24 நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்டங்களில் உள்ள பல்வேறு நிறுவன... மேலும் பார்க்க

காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

ஆட்சியரகம் எதிரே நடைபெற்ற இப்போராட்டத்துக்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் மேகலா தலைமை வகித்தாா். செயலா் தமிழரசி, பொருளாளா் சுமதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.... மேலும் பார்க்க