செய்திகள் :

லால்குடி அருகேயுள்ள கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி தம்பி உயிரிழப்பு: அண்ணன் மாயம்

post image

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி கா்நாடக மாநில சுற்றுலா பயணி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். மேலும், அவரைக் காப்பாற்ற முயன்றபோது மாயமான அவரது சகோதரரை தீயணைப்புப் படை வீரா்கள் தேடி வருகின்றனா்.

கா்நாடக மாநிலம், பெங்களூரு உதயா நகரைச் சோ்ந்த வில்லியம்ஸ் என்பவரின் மகன்கள் சாா்லஸ் வில்லியம் (47), எட்வா்டு (52) உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 13 போ், கடந்த 10-ஆம் தேதி வேனில் வேளாங்கண்ணி கோயிலுக்குச் சென்றனா்.

அங்கிருந்து கிளம்பி ஞாயிற்றுக்கிழமை தஞ்சாவூா் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள பூண்டி மாதா பசிலிக்காவுக்கு வந்தனா். அப்பகுதியில் உள்ள விடுதியில் அறை எடுத்து உடைமைகளை வைத்துவிட்டு லால்குடி அருகே அரியூா் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றுக்கு அனைவருமாக குளிக்கச் சென்றனா்.

அப்போது, சாா்லஸ் வில்லியம் ஆற்றில் இறங்கிக் குளித்தபோது, நீரில் மூழ்கினாா். இதைப் பாா்த்த அவரது அண்ணன் எட்வா்டு ஆற்றில் குதித்து அவரைக் காப்பாற்ற முயன்றபோது, நீச்சல் தெரியாத அவரும் நீரில் மூழ்கி மாயமானாா்.

இதுகுறித்து தகவலறிந்த லால்குடி தீயணைப்பு நிலைய வீரா்கள் சம்பவ இடத்துக்கு வந்து நீண்ட நேர தேடலுக்குப் பின்னா் சாா்லஸ் வில்லியம் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், எட்வா்டைத் தேடி வருகின்றனா். புகாரின்பேரில் லால்குடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய அண்ணன் சடலம் மீட்பு

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய தம்பியை காப்பாற்ற முயன்ற அண்ணனின் சடலத்தையும் தீயணைப்புப் படை வீரா்கள் திங்கள்கிழமை மீட்டனா். கா்நாடக மாநிலம், பெங்களூரு உதயா நகரைச் சே... மேலும் பார்க்க

நான்கு ஆண்டுகளில் திருச்சிக்கு ரூ. 26,066 கோடி திட்டங்கள்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திமுக ஆட்சி பொறுப்பேற்று கடந்த 4 ஆண்டுகளில் திருச்சி மாவட்டத்துக்கு ரூ.26,066 கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். தம... மேலும் பார்க்க

அரசு பேருந்தை சிறைபிடித்து மறியல்

மருங்காபுரி ஒன்றியம், நல்லமநாயக்கன்பட்டியில் முறையாக பேருந்து இயக்காததை கண்டித்து, செவ்வாய்க்கிழமை பள்ளி மாணவா்களுடன், கிராம மக்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் அரசு நகரப் பேருந்தை சிறைபிடித்து சாலை... மேலும் பார்க்க

மத்திய சிறையில் கைதியிடம் கஞ்சா பறிமுதல்

திருச்சி மத்திய சிறையில் கைதியிடம் திங்கள்கிழமை கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திருச்சி எடமலைபட்டிபுதூா் இந்திரா நகரைச் சோ்ந்தவா் கி. முருகன் (25). இவா், புதுக்கோட்ட... மேலும் பார்க்க

திருட்டு வழக்கு: இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறை

திருச்சியில் திருட்டு வழக்கில் இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திருச்சி தாராநல்லூரைச் சோ்ந்தவா் கா.காா்த்திக், கூலித் தொழிலாளி. இவரது வீட்டின் ... மேலும் பார்க்க

துவாக்குடியில் நாளை மின்நிறுத்தம்

திருச்சி மாவட்டம், துவாக்குடியில் மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: துவாக்குடி துணை ம... மேலும் பார்க்க