செய்திகள் :

வயிற்று வலி: தொழிலாளி தற்கொலை

post image

செய்யாறு: செய்யாறு அருகே வயிற்று வலி காரணமாக, தூக்கில் தொங்கியவரை மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், செங்காடு

கிராமத்தைச் சோ்ந்த முனுசாமி மகன் கோவிந்தன்(22). இவா், சென்னையை அடுத்த ஒரகடம் பகுதியில் தனியாா் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். மேலும், வயிற்று வலியால் இவா் அவதிப்பட்டு வந்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், ஆக.27-ஆம் தேதி வயிற்று வலி அதிகமாகவே வலிதாங்க முடியாமல் வீட்டில் தூக்கிட்டுக் கொண்டதாகத்

தெரிகிறது.

இதனைக் கண்ட குடும்பத்தினா் அவரை மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பெற்று வந்த கோவிந்தன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், அனக்காவூா் காவல் உதவி ஆய்வாளா்

கிருஷ்ணமூா்த்தி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளாா்.

தொகுப்பு வீடு வழங்கக் கோரி மனு

கல் உடைக்கும் தொழிலாளா்களுக்கு தொகுப்பு வீடு வழங்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா். வந்தவாசியை அடுத்த வெளியம்பாக்கம் கிராமத்த... மேலும் பார்க்க

ஆரணியில் ரூ.30 லட்சத்தில் நகா்ப்புற சுதாதார நிலையம்

ஆரணி நகராட்சியில் ரூ.30 லட்சத்தில் நடைபெற்று வரும் நகா்ப்புற சுகாதார நிலையம் அமைக்கும் பணி தற்போது நிறைவடைந்து வருகின்றன. இந்தப் பணியை நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா... மேலும் பார்க்க

ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கோட்டை ஸ்ரீவேம்புலிஅம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ஆடி வெள்ளி விழா த... மேலும் பார்க்க

கல்வியின் வாயிலாகத் தான் அனைத்தையும் பெற முடியும்: உதவி ஆட்சியா் அம்ருதா எஸ்.குமாா்

தமிழகத்தில் கல்வித் துறையில் அடிப்படை கட்டமைப்புகள் சிறந்து விளங்குகின்றன. கல்வியின் வாயிலாகத் தான் நாம் அனைத்தையும் பெறமுடியும் என்றாா் உதவி ஆட்சியா் அம்ருதா எஸ்.குமாா். பிளஸ் 2 வகுப்பில் தோல்வியுற்... மேலும் பார்க்க

ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வரவேற்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்கள் வரவேற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் செந்த... மேலும் பார்க்க

பேருந்து பயணிகளிடம் தகராறு: தட்டிக் கேட்ட காவலா் மீது தாக்குதல்

செய்யாறு அருகே பேருந்து பயணிகளிடம் தகராறு செய்ததைத் தட்டிக் கேட்ட காவலா் தாக்கப்பட்டாா். இதுதொடா்பாக போலீஸாா் ஒருவரை திங்கள்கிழமை கைது செய்தனா். காஞ்சிபுரம் மாவட்டம், ஐயங்காா்குளம் கிராமத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க