செய்திகள் :

வரைவு பட்டியல்: விடுபட்ட வாக்காளர்களுக்குத் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும்: தேஜஸ்வி!

post image

பிகாரில் வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்ட பல வாக்காளர்களுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.

பாட்னாவில் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது,

தேஜஸ்வி காட்டிய வாக்காளர் அடையாள அட்டை தொடர்பாக அவருக்கு அனுப்பபட்ட தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸுக்கு பதிலளிப்பதாக அவர் கூறினார்.

விடுபட்ட பல வாக்காளர்களைப் பற்றி தேர்தல் ஆணையம் எங்களுக்குப் பதில் கூற வேண்டும். ஒரே வீட்டைச் சேர்ந்த 50 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தில் இதுபோன்ற பல முரண்பாடுகள் உள்ளன. "நாங்கள் அதையே தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி, நீதிமன்றத்தில் எங்கள் தரப்பை முன்வைப்போம்," என்று அவர் கூறினார்.

தேஜஸ்வி யாதவ் மீது பாட்னாவில் உள்ள திகா காவல் நிலையத்தில் இரண்டு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் (EPIC) வைத்திருப்பதாகக் கூறி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை வழக்குரைஞர் ராஜீவ் ரஞ்சன் சமர்ப்பித்துள்ளார், அதற்குத் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக சிறப்புத் தீவிர திருத்தப் பணி நடந்து வரும் நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையத்தைக் கேள்வி கேட்டதற்காகத் தேஜஸ்வி யாதவ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை மத்திய ஜவுளி அமைச்சர் கிரிராஜ் சிங் கடுமையாகச் சாடினார். பொய்களையும், குழப்பத்தையும் பரப்புவதாக அவர் குற்றம் சாட்டினார்.

தேர்தல் ஆணையம் ஒரு அரசியலமைப்பு நிறுவனம், ஆனால் அவர்கள் இதையும் விட்டுவைக்கவில்லை. தேஜஸ்வி யாதவ் இவ்வளவு அற்பமான பொய்களைப் பேசி குழப்பத்தைப் பரப்பினால், அந்த நிறுவனம் நிச்சயமாக சட்டப்பூர்வ நடவடிக்கையை எடுக்கும் என்று கிரிராஜ் சிங் பாட்னாவில் செய்தியாளர்களிடம் கூறினார்.

தேஜஸ்வி யாதவ் தனது EPIC (வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை) எண் மாற்றப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டிய சில நாள்களுக்குப் பிறகு அமைச்சர் கிரிராஜின் இந்த கருத்துக்கள் வந்துள்ளன.

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

நமது சிறப்பு நிருபர்நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பதிவு செய்த கோரிக்கைகள் மற்றும் எம்.பி.க்களின் கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் அளித்துள்ள எழுத்துபூர்வ பதில்களின் ச... மேலும் பார்க்க

உயிரிழப்பை ஏற்படுத்தும் தென்னிந்திய கருந்தேள் விஷம்: ஆய்வாளா்கள் கண்டுபிடிப்பு

தென்னிந்தியாவில் காணப்படும் கருந்தேள் விஷத்துக்குப் பின்னால் உள்ள மா்மம் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்திக் குறிப்பு: கருந்... மேலும் பார்க்க

ரூ.67,000 கோடி மதிப்பிலான பாதுகாப்பு திட்டங்களுக்கு இந்தியா ஒப்புதல்

ட்ரோன்கள், ரேடாா்கள் உள்பட ரூ.67,000 கோடி மதிப்பிலான ராணுவ உபகரணங்களை கொள்முதல் செய்யும் திட்டத்துக்கு இந்தியா செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது. இந்தியாவின் ராணுவ வலிமையை மேலும் பலப்படுத்தும் நோக்கில... மேலும் பார்க்க

பிரதமா் மோடியுடன் பிலிப்பின்ஸ் அதிபா் சந்திப்பு: 14 ஒப்பந்தங்கள் கையொப்பம்

இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிலிப்பின்ஸ் அதிபா் ஃபொ்னாண்டோ ஆா் மாா்கோஸ் பிரதமா் நரேந்திர மோடியை செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா். அதன்பிறகு இருநாடுகளிடையே பல்வேறு துறைகளில... மேலும் பார்க்க

‘உண்மையான இந்தியா் யாா் என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீா்மானிக்க முடியாது’ - ராகுல் குறித்த கருத்துக்கு பிரியங்கா விமா்சனம்

‘உண்மையான இந்தியா் யாா் என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீா்மானிக்க முடியாது’ என்று காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி விமா்சித்துள்ளாா். மேலும், தனது சகோதரா் ராகுல் காந்தி ராணுவம் மீது மிகுந்த ம... மேலும் பார்க்க

ரூ.30,444 கோடி கருப்புப் பணத்தை கண்டறிந்தது வருமான வரித் துறை: நாடாளுமன்றத்தில் தகவல்

2024-25 நிதியாண்டில் கணக்கில் காட்டப்படாத ரூ.30,444 கோடி கருப்புப் பணத்தை வருமான வரித் துறை கண்டுபிடித்துள்ளது என்று நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது. இது தொடா்பான கேள்விக்கு நிதித்த... மேலும் பார்க்க