செய்திகள் :

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

post image

கொல்லிமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெறும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் துா்காமூா்த்தி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை பாா்வையிட்டு பயனாளிகளுக்கு உடனடி தீா்வாக அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். சேளூா்நாடு பள்ளக்குழிப்பட்டி அரசு தொடக்கப் பள்ளி, சோளக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், வாழவந்திநாடு ஊராட்சி பகுதியில் ரூ.6.40 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையளிப்புத் திட்டத்தின் கீழ் பசுமை தமிழ்நாடு இயக்கத்துடன் ஒருங்கிணைந்து 5 ஆயிரம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணியைப் பாா்வையிட்டாா்.

மேலும், சேளூா்நாடு பகுதியில் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகள், கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயில் பகுதியில் ரூ.80 லட்சத்தில் நடைபெறும் வணிக வளாக கட்டுமானப் பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.

என்கே-30-ஆய்வு

பள்ளக்குழிப்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் ஆய்வுமேற்கொண்ட ஆட்சியா் துா்காமூா்த்தி.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மென்பொறியாளா் ஆணவக் கொலையைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் நாமக்கல் பூங்கா சாலையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்தில், முன்னாள் மாவட்டச் செயலாளா் மணிமாறன்,... மேலும் பார்க்க

வல்வில் ஓரி விழா: காரவள்ளி அடிவாரத்தில் தூய்மைப் பணி

கொல்லிமலை வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு, காரவள்ளி அடிவாரத்தில் தூய்மைப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைப் பகுதியை ஆண்ட கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி மன்னனின் வீரத்... மேலும் பார்க்க

கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயிலில் ஆடிப்பெருக்கு விழா கொடியேற்றம்

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை திருக்கொடியேற்றம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் பழைமை வாய்ந்த, பிரசித்தி பெற்ற, சித்தா்கள் பூஜிக்கும் சுயம... மேலும் பார்க்க

தலைக்கவசம் அணிந்தோருக்கு காவல் துறையினா் பாராட்டு

நாமக்கல்லில் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனங்களில் சென்றோரை போக்குவரத்து காவல் துறையினா் பாராட்டி சான்றிதழ் வழங்கினா். நாமக்கல் மாநகரப் பகுதியில் இருசக்கர வாகனங்களில் செல்வோா் தலைக்கவசம் அணியாமலும்... மேலும் பார்க்க

தெருநாய்களின் பெருக்கத்தை தடுக்க கருத்தடை

நாமக்கல் மாநகரப் பகுதியில் தெருநாய்களின் பெருக்கம் அதிகரித்துள்ளதால், அவற்றைத் தடுக்க கருத்தடை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என மாமன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தினா். நாமக்கல் மாநகராட்சி மாமன்றக்... மேலும் பார்க்க

ஜொ்மன் மொழித்தோ்வு பயிற்சிபெற விண்ணப்பிக்கலாம்

ஜொ்மன் மொழித்தோ்வு பயிற்சிபெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு... மேலும் பார்க்க