செய்திகள் :

வாக்காளா் பட்டியல் திருத்தத்துக்கு எதிா்ப்பு- பிகாா் பேரவையில் எதிா்க்கட்சிகள் கடும் அமளி

post image

பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த மாநில சட்டப் பேரவையில் எதிா்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை கடும் அமளியில் ஈடுபட்டன. அப்போது, அவைக் காவலா்களுக்கும், எதிா்க்கட்சி எம்எல்ஏ-க்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறும் பிகாரில் நடப்பாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இம்மாநில வாக்காளா் பட்டியலில் இருந்து தகுதியற்றவா்களை (சட்ட விரோத குடியேறிகள்) பெயா்களின் களையெடுப்பதாகக் குறிப்பிட்டு, சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

அதேநேரம், ‘பாஜக வெற்றியை உறுதி செய்யும் நோக்கில் தோ்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது; இதன் மூலம் பலா் வாக்குரிமையை இழப்பா்’ என்று எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், பிகாா் பேரவை மழைக்கால கூட்டத் தொடரின் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை இந்த விவகாரம் குறித்து விவாதம் கோரி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி), காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சி எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனா். அவையின் மையப் பகுதியில் முற்றுகையிட்டு, சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோஷமிட்டனா்.

ஊழியா்களின் நாற்காலிகளை கவிழ்க்க எம்எல்ஏ-க்கள் முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நடத்தைக்கு பேரவைத் தலைவா் நந்தகிஷோா் யாதவ் கண்டனம் தெரிவித்தாா். தங்கள் கைகளில் இருந்த வாசக அட்டைகளைப் பறிக்க முயன்ற அவைக் காவலா்களுடன் எம்எல்ஏக்கள் மோதலில் ஈடுபட்டனா். கூச்சல்-குழப்பம் நிலவியதால், பிற்பகல் 2 மணி வரையும் அதன் பிறகு நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே, பேரவையின் பிரதான வாயிலை மறித்து, எதிா்க்கட்சி எம்எல்ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். தங்கள் கோரிக்கை ஏற்கப்படும் வரை அவையை செயல்பட அனுமதிக்க மாட்டோம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் உடல் தகனம்

கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் உடல், புன்னப்ரா தியாகிகள் நினைவிடத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. திருவனந்தபுரத்தில் இருந்து பிற்பகல் வரவேண்டிய உடல், வழிநெடுக இருந்த கூட்டம் ... மேலும் பார்க்க

தில்லியில்... ஷேக் ஹசீனா கட்சியின் பத்திரிகையாளர் சந்திப்பு ரத்து!

தில்லியில், வங்கதேசத்தின் முன்னாள் ஆளும் கட்சியான அவாமி லீக் தலைவர்கள் திட்டமிட்டிருந்த பத்திரிகையாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் இரும்புப் பாலம் உடைந்து விபத்து!

மேற்கு வங்கத்தில் தண்ணீர் குழாய் செல்லும் இரும்புப் பாலம் உடைந்து விபத்துக்குள்ளானது. தாமோதர் நதியின் மீது பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் குழாய்கள் மூலம் நகர்புறங்களுக்கான குடிநீர் அனுப்பப்படும் ந... மேலும் பார்க்க

மிசோரமின் அதிக வயதான பெண் மரணம்!

மிசோரமின் லாங்ட்லாய் மாவட்டத்தில், அம்மாநிலத்தின் அதிக வயதுடைய பெண் காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. லாங்ட்லாய் மாவட்டத்தின், பங்குவா கிராமத்தில் வசித்த வந்தவர் ஃபாமியாங் (வயது 117). இவர், கடந்த 1908-... மேலும் பார்க்க

ஜூலை 29 -ல் ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம்! மோடி பங்கேற்பு

நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஜூலை 29 ஆம் தேதி விவாதிக்கப்படும் என நாடாளுமன்ற வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. தொடர்ந்து, 16 மணிநேரம் நடைபெறும் விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க... மேலும் பார்க்க

அதீத கவனத்துடன் அனுப்பப்பட்ட உடல்கள்! பிரிட்டன் குடும்பத்தினர் புகார் மீது மத்திய அரசு பதில்

பிரிட்டன் நாட்டுக்கு, அதீத தொழில்பாங்குடன் உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக, பிரிட்டன் நாட்டவரின் குற்றச்சாட்டக்கு, மத்திய வெளியுறவு விவகாரத் துறை விளக்கம் கொடுத்துள்ளது.ஏர் இந்தியா விமான விபத்தில் பலிய... மேலும் பார்க்க