செய்திகள் :

வாக்குகளைத் திருடியே வெற்றி பெறுகிறார் மோடி; ஆதாரத்துடன் வெளிக்காட்டுவோம்! -ராகுல் சவால்

post image

பாஜக மீது வாக்குத் திருட்டு குற்றச்சாட்டை சுமத்தியுள்ள ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு தேர்தல் ஆணையம் உதவுகிறதா? என்ற கோணத்திலும் குற்றச்சாட்டை சுமத்தியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பிகார் மாநிலம் முஸாஃபர்பூரில் இன்று(ஆக. 27) நடைபெற்ற ‘வாக்குரிமைப் பேரணியில்’ ராகுல் காந்தி பேசியதாவது: “உறுதியாகச் சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள், நரேந்திர மோடி தேர்தல்களில் வாக்குகளைத் திருடியே வெற்றி பெறுகிறார்... நரேந்திர மோடிக்கும் அமித் ஷாவுக்கும் இந்திய தேர்தல் ஆணையம் உதவி புரிகிறது.

இந்தியாவில் முதல்முறையாக கடந்த 2014-க்கும் முன்னரே குஜராத்தில் வாக்குத் திருட்டு ஆரம்பமானது. அதன்பின், அதனை 2014-இல் அவர்கள் (பாஜக) தேசிய அளவில் செயல்படுத்தவும் ஆரம்பித்தனர்.

குஜராத் மாடல் என்பது பொருளாதார மாடல் ஒன்றும் அல்ல, அது வெறும் ‘வாக்குத் திருட்டு’ மாடல்!

மத்திய பிரதேசம், ஹரியாணா, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் அவர்கள் தேர்தல்களைக் கொள்ளையடித்தார்கள். ஆனால், அப்போதெல்லாம் எங்களிடம் எந்தவொரு ஆதாரமும் இல்லாததால் எதைப்பற்றியும் வெளியில் பேசவில்லை.

ஆனால், மகாராஷ்டிரத்தில் வாக்குத் திருட்டு நடைபெற்றதற்கான ஆதாரத்தை கண்டுபிடித்துவிட்டோம். அங்கு, தேர்தல் ஆணையம் சுமார் 1 கோடி வாக்குகளை(வாக்காளர்களை) மக்களவை தேர்தலுக்குப்பின் சேர்த்தது. அவர்கள் அனைவரும் பாஜக பக்கம் சென்றுள்ளனர்.

இந்த நிலையில், ஹரியாணா, மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தல்கள் மற்றும் மக்களவை தேர்தல்களில் எப்படி வாக்குகள் திருடப்பட்டன என்பதையும் ஆதாரத்துடன் வெளிக்காட்டுவோம்” என்றார்.

மேலும் அவர் பேசுகையில், “6 வயதே நிரம்பிய சிறு குழந்தைகளுக்குக்கூட இந்தியாவில் வாக்குத் திருட்டு நடைபெறுவது தெரிந்திருக்கிறது. ‘நரேந்திர மோடி வாக்குத் திருடன்’ என்று அந்தக் குழந்தைகள் சொல்வதையும், பிகாரில் என் கண்களால் பார்த்தேன். கடந்த சில நாள்களுக்கு முன், அமித் ஷா என்ன சொன்னார் - ‘அடுத்த 40 ஆண்டுகள் பாஜக ஆட்சியில் நீடிக்கும்’ என்றார் அமித் ஷா.

அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். யாருக்கும் அது தெரியாது. ஆனால், அமித் ஷாவால் மட்டும் அடுத்த 40 ஆண்டுகள் நடைபெறக்கூடியவை பற்றி அறிந்திருக்க முடிகிறது. எப்படி? அதுதான் வாக்குத் திருட்டு!” என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

Rahul Gandhi says, "I am saying this with absolute guarantee that Narendra Modi wins elections by stealing votes.”

அமெரிக்க வரி 50%-ஆக அதிகரிப்பு: ஏற்றுமதிக்கு மாற்று வாய்ப்புகளைத் தேடும் வா்த்தக அமைச்சகம்

இந்திய ஏற்றுமதிப் பொருள்கள் மீதான அமெரிக்காவின் கூடுதலாக அறிவித்த 25 சதவீத வரி புதன்கிழமை அமலுக்கு வந்த நிலையில் மாற்று ஏற்றுமதிக்கான வாய்ப்புகளைத் தேடும் பணியில் வா்த்தக அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்... மேலும் பார்க்க

டிரம்ப் அறிவுறுத்தலுக்கு கீழ்ப்படிந்த பிரதமா்: ராகுல்

பாகிஸ்தானுடனான சண்டையை நிறுத்துமாறு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அளித்த அறிவுறுத்தலுக்கு பிரதமா் நரேந்திர மோடி உடனடியாக கீழ்ப்படிந்துள்ளாா் என்று ராகுல் காந்தி விமா்சித்தாா். பிகாா் மாநிலம் முஸாஃப... மேலும் பார்க்க

பஞ்சாப் வெள்ளம்: மீட்புப் பணியில் முதல்வரின் ஹெலிகாப்டர்!

பஞ்சாப் மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு, அம்மாநில முதல்வர் பகவந்த் மானின் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் வட ம... மேலும் பார்க்க

நொய்டா வரதட்சிணை வழக்கில் திருப்பம்: நிக்கியின் குடும்பத்தாரால் மருமகளுக்கு நடந்த கொடுமை!

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா வரதட்சிணை வழக்கில் புதிய திருப்பமாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாரும் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாக, அக்குடும்பத்தின் மருமகள் புகார் தெரிவித்துள்ளார்.எரித்துக்க... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீர் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு!

ஜம்மு - காஷ்மீரில், புனிதத் தலமான வைஷ்ணவ தேவி கோயிலுக்குச் செல்லும் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோரது எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வர் மற்றும் தோடா மாவட்டங்க... மேலும் பார்க்க

வரதட்சிணைக்காக மனைவியை எரித்துக் கொன்ற தலைமைக் காவலர் கைது!

உத்தரப் பிரதேசத்தில் வரதட்சிணைக்காக மனைவியை எரித்துக்கொன்ற தலைமைக் காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் மனைவி கடுமையான தீக்காயங்களுடன் தில்லியில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்... மேலும் பார்க்க