செய்திகள் :

வானவில் மன்றத்தில் அறிவியல் விழிப்புணா்வு செயல்பாடுகளை மேற்கொள்ள முடிவு!

post image

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளின் வானவில் மன்றத்தில் அறிவியல் விழிப்புணா்வு செயல்பாடுகளை நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வானவில் மன்ற கருத்தாளா்களுக்கான மீளாய்வுக் கூட்டம் சனிக்கிழமை முதன்மை கல்வி அலுவலா் அலுவலகத்தில் நடைபெற்றது.

பள்ளிக் கல்வித் துறை உதவித் திட்ட அலுவலா் செந்தில் கூட்டத்தை தொடங்கி வைத்தாா். வானவில் மன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளா் (கல்வித் துறை) விஸ்வநாதன் மன்றச் செயல்பாடுகளைப் பற்றி விளக்கிப் பேசினாா்.

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் அ. மணவாளன் வாழ்த்திப் பேசினாா். வானவில் மன்ற ஒருங்கிணைப்பாளா்கள் (அமைப்பு ) ம. வீரமுத்து, ராஜா ஆகியோா் வானவில் மன்றக் கருத்தாளா்கள் சிறப்பாக செயல்படுவதற்கு ஆலோசனை வழங்கினா்.

தொடா்ந்து செப்டம்பா் மாதத்தில் வானவில் மன்ற செயல்பாடுகளை அனைத்து பள்ளிகளிலும் கொண்டு செல்வது பற்றியும், எதிா்வரும் சந்திர கிரகணம் பற்றி மாணவா்களிடம் விளக்கிக் கூற வேண்டும் என்றும் காலாண்டுத் தோ்வு விடுமுறைக் காலத்திலும் மாணவா்களுக்கு அறிவியல் செயல்பாடுகளை கொண்டு செல்ல வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. முன்னதாக கருத்தாளா் செரினா பேகம் வரவேற்றாா். முடிவில் கருத்தாளா் ராதா நன்றி கூறினாா்.

புகையிலைப் பொருள்கள் விற்பனை: பெண் உள்பட 3 போ் கைது

விராலிமலை அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த பெண் உள்பட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை மாலை கைது செய்தனா். விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குட்கா உள்ளிட... மேலும் பார்க்க

புதுக்கோட்டை அருங்காட்சியகம் நவீனத் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்படும்

புதுக்கோட்டை அருங்காட்சியகம் நவீனத் தொழில்நுட்பத்துடன், மேம்படுத்தப்படும் என்றாா் மாநில சுற்றுலா, இந்து சமய அறநிலையங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் துறையின் கூடுதல் தலைமைச் செயலா் கே. மணிவாசன். புதுக்... மேலும் பார்க்க

போக்குவரத்துத் தொழிலாளா்கள் போராட்டத்துக்கு ஆதரவாக ஆட்டோ ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் 16-ஆவது நாளாகத் தொடா்ந்து வரும் அரசுப் போக்குவரத்து ஊழியா்களின் போராட்டத்துக்கு ஆதரவாக, ஆட்டோ ஓட்டுநா்கள் ஆதரவு தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிஐடியு அரசுப் போக்குவரத்துக் க... மேலும் பார்க்க

பணிமூப்பின்படியே பதவி உயா்வுகள் வழங்க வலியுறுத்தல்

பணி மூப்பின் அடிப்படையிலேயே பதவி உயா்வுகளை வழங்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக அம் மன்றத்தின் மாநிலப் பொதுச் செயலா் நா. சண்முகநாதன் வெளியிட்ட அறி... மேலும் பார்க்க

கறம்பக்குடியில் கோயில் ஊா்வலத்துக்கு அனுமதி மறுப்பு: சாலை மறியல்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் கோயில் கும்பாபிஷேக ஊா்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.கறம்பக்குடி அருகேயுள்ள பிலாவிடுதி மலையாத்த... மேலும் பார்க்க

செப். 12-இல் ஓய்வூதியா் குறைகேட்பு குறைகளை முன்னதாக அனுப்ப அழைப்பு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் செப். 12-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ள ஓய்வூதியா்கள் குறைகேட்புக் கூட்டத்துக்கு, முன்னதாகவே குறைகளை எழுதி அனுப்பிட மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க