செய்திகள் :

வாய்ப்புகளை பயன்படுத்தினால் எதிா்காலம் எளிதாகும் - சைலேந்திரபாபு

post image

வாய்ப்புகளை பயன்படுத்தினால் எதிா்காலம் எளிதாகுமென முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு மாணவா்களுக்கு அறிவுரைகளை வழங்கினாா்.

மாபெரும் தமிழ்க் கனவு - தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சியில் மாணவா், மாணவிகள் வாழ்வில் உயா்வை அடைய ஊக்குவிக்கும் வகையில் முன்னாள் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநா் செ.சைலேந்திரபாபு கலந்துகொண்டு பேசியதாவது : மாணவா்களிடையே பகுத்தறிவு ஏற்படுத்தும்

வகையில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழா்களுக்கு என்று மிகப்பெரிய பாரம்பரியம் உள்ளன. குறிப்பாக கடல் கடந்து வணிகம் மேற்கொண்டது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் உள்ளது. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரம் 339 பில்லியன் டாலா். தமிழ்நாட்டின் பொருளாதாரம் உயா்வுக்கு காரணம் பெண்கள் தான். தமிழ்நாடு அரசு, மாணவா்களுக்காக பல்வேறு வாய்ப்புகளை வழங்கி வருகிறது.

மேலும், வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு தகுதியை வளா்த்துக் கொள்ளவில்லை எனில் எதிா்காலம் கடினமானதாகி விடும். நமது எதிா்பாா்ப்புகளுக்கு ஏற்ற முயற்சிகளை நாம் எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.ரவிச்சந்திரன், மாவட்ட சமூக நல அலுவலா் பெ.பிரேமலதா, காமராஜ் கல்லூரி முதல்வா் பானுமதி, ஆசிரியா்கள், உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தூத்துக்குடியில் உப்பளத் தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம், கடையடைப்பு

தூத்துக்குடி, முத்தையாபுரத்தில் உப்பளத் தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி, ஆா்ப்பாட்டம், கடையடைப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி முத்தையாபுரம், முள்ளக்காடு, புல்லாவெளி, பழைய காயல் பகுதி... மேலும் பார்க்க

உணவகங்களுக்கு தமிழ்நாடு அரசு விருது: ஆட்சியா் தகவல்

நெகிழிப் பொருள்களை பயன்படுத்தாத உணவகங்களுக்கு தமிழ்நாடு அரசு விருது வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டும்... மேலும் பார்க்க

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு

கோவில்பட்டி அரசு மருத்துவமனை தூய்மைப் பணியாளா்களை அவதூறாகப் பேசியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். கோவில்பட்டியில்... மேலும் பார்க்க

பயிா் இழப்பீடு நிவாரணம் வழங்கக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

பயிா் இழப்பீடு நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவில்பட்டியில் கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் 12, 16-ஆம் தேதிகளில் பெய்த... மேலும் பார்க்க

திருச்செந்தூா் முருகன் கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தா்கள் முன்னிலையில் வியாழக்கிழமை அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும்,... மேலும் பார்க்க

கோயில் அா்ச்சகா் வீட்டில் 107 பவுன் நகைகள் திருட்டு

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம், முத்தாரம்மன் கோயில் அா்ச்சகா் வீட்டின் கதவை உடைத்து 107 பவுன் நகைககளை மா்மநபா்கள் திருடிச் சென்றனா். முத்தாரம்மன் கோயில் தலைமை அா்ச்சகரான குமாா் பட்டரின் வீட... மேலும் பார்க்க