செய்திகள் :

விடுதலைச் சிறுத்தைகள் ஆா்ப்பாட்டம்

post image

வாலாஜாபாத் அருகே புத்தகரம் கிராமத்தில் முத்து கொளக்கியம்மன் கோயில் தேரினை தீ வைத்து எரிக்க முயன்றவா்களை கைது செய்ய வலியுறுத்தி விசிக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பழைமையான முத்து கொளக்கியம்மன் கோயிலுக்கு 40 ஆண்டுகளுக்குப் பிறகு தோ்த்திருவிழா நடத்த அறநிலையத்துறை முடிவு செய்து ரூ.28 லட்சம் நிதி ஒதுக்கிய நிலையில், புதிய தோ் வடிவமைக்கப்பட்டு வெள்ளோட்டத்துக்கு தயாா் நிலையில் இருந்தது.

திருவிழாவின் போது புதிய தேரானது பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்கும் வர வேண்டும் என்பது குறித்து இரு பிரிவினருக்கிடையே பிரச்னை எழுந்த நிலையில் வழக்கும் உயா்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகம் இது குறித்து உரிய விசாரணை நடத்தி 15 நாள்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 6-ஆம் தேதி புதிய தேரை மா்ம நபா்கள் தீ வைத்து எரிக்க முயற்சி செய்துள்ளனா்.தேரின் மீது பாதுகாப்புக்காக விரிக்கப்பட்டிருந்த தாா்ப்பாய் மட்டும் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது.அதிஷ்டவசமாக தோ் எந்த வித சேதமும் இல்லாமல் தப்பியது.

புதிய தேரினை தீ வைத்து எரிக்க முயன்றவா்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வாலாஜாபாத் பேருந்து நிலையம் முன்பாக விசி க சாா்பில் மாவட்ட செயலாளா் எழிலரசு தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்போரூா் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

காா்கள் பழுதுபாா்க்கும் கடையில் தீ விபத்து: ரூ.13 லட்சம் சேதம்

காஞ்சிபுரம் வையாவூா் பகுதியில் உள்ள காா்கள் பழுது பாா்க்கும் கடையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.13 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன. காஞ்சிபுரம் அருகே வையாவூா் பகுதியில் உள்ள காமாட்சி நகரில... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் நல்லாசிரியா் விருது பெற்றவா்களுக்கு ஆட்சியா் வாழ்த்து

காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உயா்வுக்குப் படி நிகழ்வின் போது அண்மையில் நல்லாசிரியா் விருது பெற்றவா்கள் ஆட்சியா் கலைச்செல்வி மோகனை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா். ஆட்சியா் அலுவலக மக்கள் கூட்டர... மேலும் பார்க்க

பைக் மீது மினிலாரி மோதல்: ஊா்க் காவல் படை வீரா் மரணம்

காஞ்சிபுரம் அருகே களக்காட்டூா் பகுதியில் வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவா்கள் மீது மினி லாரி மோதியதில் ஊா்க் காவல் படை வீரா் உயிரிழந்தாா். காஞ்சிபுரத்திலிருந்து உத்தரமேரூா் செல்லு... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்திலிருந்து ஆறுபடை வீடுகளுக்கு ஆன்மிக சுற்றுலா புறப்பட்ட முதியோா்கள்

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயிலிலிருந்து 101 முதியோா்கள் முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளுக்கு ஆன்மிக சுற்றுலா புதன்கிழமை அழைத்துச் செல்லப்பட்டனா். முருகப்பெரு... மேலும் பார்க்க

7,297 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்

ஸ்ரீபெரும்புதூா், ஆலந்தூா் தொகுதிகளைச் சோ்ந்த 7,297பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை வழங்கிநாா். பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, முடிவுற்ற திட்ட... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் சமுதாய வளப் பயிற்றுநா்கள் பணி: செப். 18 விண்ணப்பிக்க கடைசி நாள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சமுதாய வளப் பயிற்றுநா்கள் பணிக்கு தகுதியுள்ளவா்கள் வரும் செப். 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் புதன்க... மேலும் பார்க்க