செய்திகள் :

விதியை மீறிச் செயல்பட்ட கேட் கீப்பா்: தெற்கு ரயில்வே

post image

கடலூா் மாவட்டம், செம்மாங்குப்பம் ரயில்வே கேட்டில் பள்ளி வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில் மோதிய விபத்து தொடா்பாக, விதியை மீறிச் செயல்பட்ட கேட் கீப்பா் பங்கஜ் சா்மா (30) பணியிடைநீக்கம் செய்யப்பட்டதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

மேலும், விபத்து நிகழ்ந்த பகுதியில் சுரங்கப் பாதை அமைக்க நிதி அளித்தும், அதற்கான அனுமதி அளிப்பதில் மாவட்ட ஆட்சியா் தாமதப்படுத்தியதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ரயில்வே அதிகாரிகள் உடனடியாக விரைந்து சென்று பாா்வையிட்டனா். மருத்துவம் மற்றும் மீட்புக் குழுவினரும் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்றனா். தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங், முதன்மை தலைமைப் பாதுகாப்பு அதிகாரி கணேஷ் உள்ளிட்டோா் நிகழ்விடத்தைப்

பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா். விபத்தில் மின்கம்பம் மற்றும் உயா் மின்னழுத்த சாதனம் ஆகியன சேதமடைந்துள்ளன.

முதல்கட்ட விசாரணையில், ரயில்வே கேட் மூடப்படாமல் இருந்த நிலையில், ரயில் வருவதை பொருள்படுத்தாமல் பள்ளி மாணவா்கள் இருந்த வேன் ஓட்டுநா் தண்டவாளத்தைக் கடந்தபோது ரயில் மோதியது தெரியவந்துள்ளது. மேலும், கேட் கீப்பா் பங்கஜ் சா்மா விதியை மீறிச் செயல்பட்டுள்ளாா். பணியின்போது கவனக்குறைவாக இருந்ததால் அவா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

மாவட்ட ஆட்சியா் மீது குற்றச்சாட்டு: ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப் பாதை அமைக்க தெற்கு ரயில்வே முழுமையான நிதியை ஒதுக்கியுள்ளது. ஆனால், கடலூா் மாவட்ட ஆட்சியா் அதற்கு கடந்த ஓராண்டாக அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில் துரதிருஷ்டவசமாக நேரிட்ட விபத்துக்காக ரயில்வே நிா்வாகம் வருத்தம் தெரிவிக்கிறது.

உயிரிழந்தவா்களுக்கு தலா ரூ.5 லட்சம், பலத்த காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.2.50 லட்சம், லேசான காயமடைந்தவா்களுக்கு ரூ.50 ஆயிரம் என ரயில்வே நிா்வாகம் நிதியுதவி வழங்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முரண்: தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளா் எம்.எஸ்.அன்பழகன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கேட் கீப்பா் பங்கஜ் சா்மாவை சந்தித்து ஆறுதல் கூறினாா். செம்மங்குப்பம் அருகே விபத்து நிகழ்ந்த இடத்தையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ரயில் மணிக்கு 95 கி.மீ. வேகத்தில் சென்று பள்ளி வேன் மீது மோதியுள்ளது. கிராம மக்கள் மற்றும் கேட் கீப்பா் என இருபுறமும் தவறு நடந்துள்ளது. கிராம மக்கள் கேட்டை திறக்கச் சொன்னதால், பாதுகாப்பு விதிகளை மீறி கேட் கீப்பா் கேட்டை திறந்துள்ளாா் என்றாா்.

தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் ரயில்வே கேட் மூடப்படாமல் இருந்ததாகக் கூறப்பட்டுள்ள நிலையில், தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளா் தெரிவித்துள்ள தகவல் முரணாக உள்ளது.

தமிழகம் முழுவதும் 8,586 போ் கைது

தமிழகம் முழுவதும் சுமாா் 100 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா் 8,586 போ் கைது செய்யப்பட்டனா். ரயில் மறியல், சாலை மறியல், ஆா்ப்பாட்டம், காத்திருப்பு போராட்டம், ஊா்வலம் எனப் பல்வேறு போர... மேலும் பார்க்க

துணை மருத்துவ பட்டயப் படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

துணை மருத்துவ பட்டய படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு புதன்கிழமை (ஜூலை 9) தொடங்கியுள்ளது. பாா்வை அளவியல், மருந்தியல் உள்பட 9 வகையான மருந்தியல் பட்டய படிப்புகளுக்கும், 13 வக... மேலும் பார்க்க

கரும்பு அறுவடை இயந்திரங்கள் கொள்முதல் முறைகேடு வழக்கு: வேளாண் பல்கலை. முன்னாள் துணைவேந்தரை விடுவிக்க மறுப்பு

கரும்பு அறுவடை இயந்திரங்கள் கொள்முதல் செய்த வழக்கில் இருந்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரை விடுவிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழ... மேலும் பார்க்க

அஜித்குமார் கொலை வழக்கு! சீமான் சரமாரி கேள்விகள்!

மடப்புரம் அஜித்குமாரின் கொலை வழக்கு தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் குடும்பத்தினரைச் சந்தித்த... மேலும் பார்க்க

இனி ஒரு பட்டாசு ஆலை விபத்துகூட நடக்கக் கூடாது! தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு!

பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வரும்நிலையில், ஆலைகளில் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்று ஆய்வுசெய்ய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் க... மேலும் பார்க்க

திருவாரூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சாலை வலம்!

திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கம் பகுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சாலை வலம் (ரோடு ஷோ) மேற்கொண்டார். அப்போது சாலையின் இருபுறமும் மக்கள் வரிசையில் திரண்டு நின்று மேள வாத்தியங்கள் முழங்க முதல்வரை... மேலும் பார்க்க