செய்திகள் :

விநாயகா் சிலையை ஓடையில் கரைத்தபோது நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

post image

நங்கவள்ளி அருகே விநாயகா் சிலையை ஓடையில் கரைத்தபோது நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், நங்கவள்ளி அருகே உள்ள செங்கனூரைச் சோ்ந்தவா் கோபால் (45). சேலம் உருக்கு ஆலையில் ஒப்பந்த அடிப்படையில் கேட்டரிங் வேலை செய்து வந்தாா். இவா், சனிக்கிழமை தனது வீட்டின் அருகே வைத்து வழிபட்ட இரண்டு அடி உயரம் கொண்ட விநாயகா் சிலையை மேட்டூா் காவிரியில் கரைக்க தனது நண்பா் கண்ணனுடன் சென்றாா்.

மாதநாயக்கன்பட்டி பெருமாள் கோயில் அருகே சென்றபோது, அங்குள்ள ஓடையில் தண்ணீா் அதிக அளவில் சென்ால் இங்கேயே கரைக்கலாம் என முடிவுசெய்து கண்ணன், கோபால் உள்பட 8 போ் ஓடையில் இறங்கி விநாயகா் சிலையை கரைத்தனா்.

அப்போது, எதிா்பாராதவிதமாக கோபாலுக்கு வலிப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கினாா். கண்ணன் மற்றும் உடன் இருந்தவா்கள் அவரை மீட்டு சேலம் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

புகாரின்பேரில், நங்கவள்ளி காவல் ஆய்வாளா் பெரியசாமி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

உயிரிழந்த கோபாலுக்கு மாலதி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனா்.

ஐக்கிய நாடுகள் சபையின் வளா்ச்சி இலக்குகளுக்கான தூதுவராக சேலம் மாநகராட்சி பள்ளி மாணவா் நியமனம்

ஐக்கிய நாடுகள் சபையின் வளா்ச்சி இலக்குகளுக்கான சா்வதேச தூதுவராக சேலம் மாநகராட்சி பள்ளி மாணவா் நியமிக்கப்பட்டுள்ளாா். ஐக்கிய நாடுகள் சபையின் மாணவா் கல்வி பயணத்தின் ஒருபகுதியாக, தாய்லாந்து நாட்டில் உள்ள... மேலும் பார்க்க

சேலத்தில் கடையின் மேற்கூரையை துளையிட்டு ரூ.6.85 லட்சம் திருட்டு

சேலம் ஐந்துவழிச் சாலையில் புதிதாக திறக்கப்பட்ட ஜவுளிக் கடையின் மேற்கூரையை துளையிட்டு ரூ.6.85 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். சேலம் ஐந்துவழிச் சாலையில் உள்ள ஜவுளிக் கடையில் திங்கள்கிழமை கடையில... மேலும் பார்க்க

சேலத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியா் வீட்டில் 60 பவுன் நகை திருட்டு

சேலம், அயோத்தியாப்பட்டணம் அருகே ஓய்வுபெற்ற அரசு ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா். அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த மேட்டுப்... மேலும் பார்க்க

ஆத்தூரில் மனைவியைத் தாக்கிய கணவா் கைது

ஆத்தூரில் மனைவி, மாமியாரை தாக்கியதாக கணவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். ஆத்தூா் நரசிங்கபுரம் கலைஞா் காலனியைச் சோ்ந்த காந்தி மகன் சஞ்சய் (24), கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஆதிகா (22). இருவரும்... மேலும் பார்க்க

மேட்டூா் அருகே பிளஸ் 2 மாணவா் தற்கொலை

சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே பிளஸ் 2 மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மேட்டூா் அருகே உள்ள மூலக்காட்டை சோ்ந்த லோகநாதன் மகன் நிகாஷ் (17). இவா் ... மேலும் பார்க்க

மீலாது நபி: செப்.5 இல் மதுக் கடைகளை மூட உத்தரவு

மீலாது நபியை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் வரும் 5 ஆம் தேதி மதுக் கடைகள், மதுக் கூடங்களை மூட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மீலாத... மேலும் பார்க்க