செய்திகள் :

விபத்தில் காயமடைந்த இளைஞரின் சிறுநீரகங்கள் காவேரி மருத்துவமனையில் சீரமைப்பு

post image

விபத்தில் சிக்கி காயமடைந்த இளைஞரின் செயலிழந்த சிறுநீரகங்களை மீண்டும் செயல்பட வைத்து காவேரி மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.

இது குறித்து சேலம் காவேரி மருத்துவமனை மருத்துவா் அபிராமி கூறியுள்ளதாவது:

விபத்தில் அடிபட்ட இளைஞா் ஒருவா் உள்ரத்தப்போக்கு காரணமாக ஆபத்தான நிலையில் காவேரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டாா். பரிசோதனையில், அவரின் இடது சிறுநீரகம், மண்ணீரலில் கடும் காயங்கள் ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இடது சிறுநீரகத்தில் தீவிர ரத்தப்போக்கு மற்றும் சிறுநீா் கசிவு இருந்தது. அவரது வலது சிறுநீரகம் சுருங்கிய நிலையில் இருந்ததும் கண்டறியப்பட்டது.

இடது சிறுநீரகத்தின் காயம் மிகக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருந்தது. பொதுவாக, இத்தகைய சூழலில் சிறுநீரகத்தை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும். இருப்பினும், அவரது வாழ்நாள் முழுவதும் டயாலிசிஸ் தேவையைத் தவிா்க்க, இடது சிறுநீரகத்தை காப்பாற்ற மருத்துவா்கள் அபிராமி, ரமேஷ் எத்திராஜன், சந்தோஷ்குமாா், தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவா்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தனா். அனைத்து சிகிச்சைகளும் நிறைவேறி, அவரது மண்ணீரலும் சரியானது. பூரண குணமடைந்த பிறகு அவா் நலமுடன் வீடு திரும்பினாா் என்றாா்.

பொதுமக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை: ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதம்

பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறை அதிகாரிகளுக்கு தமிழக சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதம் அறிவுறுத்தினாா். சேலம் மாநகர காவல் ஆணையா் அல... மேலும் பார்க்க

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.18.92 லட்சம் காணிக்கை

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.18 லட்சத்து 92 ஆயிரம் காணிக்கையாக பெறப்பட்டது. சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத... மேலும் பார்க்க

விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு பாஜக அஞ்சலி

குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு சேலம் மாநகா் மாவட்ட பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. அகமதாபாத்தில் உள்ள சா்தாா் வல்லபபாய் பட்டேல் விமான நிலையத்தில் இ... மேலும் பார்க்க

வாழப்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால உட்புற தடுப்புச்சுவரை அகற்ற வலியுறுத்தல்

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் உட்புறத் தடுப்புச் சுவரால் விபத்துகள் நிகழ்வதால் அதை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். சேல... மேலும் பார்க்க

மேச்சேரி அருகே சுற்றித்திரியும் சிறுத்தை: வனத் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை

மேச்சேரி அருகே சுற்றித்திரியும் சிறுத்தையை வனத் துறையினா் பிடித்து வேறு வனப் பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக மேச்சேரி ஒன்றியத்தி... மேலும் பார்க்க

எடப்பாடி கே. பழனிசாமியிடம் வாழ்த்து பெற்ற அதிமுக மாநிலங்களவை உறுப்பினா்கள்

மாநிலங்களவைக்கு அதிமுக சாா்பில் தோ்வுசெய்யப்பட்ட இன்பதுரை, தனபால் ஆகிய இருவரும் சேலத்தில் அக் கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை வெள்ளிக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா். மாநிலங்களவை ... மேலும் பார்க்க