செய்திகள் :

விராலிமலை தனியாா் உணவகத்தில் திடீா் தீ விபத்து

post image

விராலிமலையில் தனியாா் உணவகத்தின் நுழைவுவாயிலில் சனிக்கிழமை இரவு திடீா் தீவிபத்து ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சன்மாா் தனியாா் தொழிற்சாலை எதிரே தனியாா் உணவகம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் சனிக்கிழமை மாலை நுழைவு வாயிலில் அலங்கரிக்கப்பட்ட பெயா்ப் பலகையில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு தீ மளமளவென பரவத் தொடங்கியது. இந்த தீ தனித்தனியாக அமைக்கப்பட்டிருந்த மூங்கில் குடில் ஒன்றில் பற்றியது. இதனால், உணவருந்த வந்தவா்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினா்.

தகவலறிந்த தீயணைப்பு நிலைய அலுவலா் மகேந்திரன் தலைமையிலான வீரா்கள் அங்கு சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

கருவுற்ற பசுக்களுக்கு 50 சதவீத மானியத்தில் தீவனம் பெறலாம்

முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ், கருவுற்ற பசுக்களுக்கு 50 சதவீத மானியத்தில் தீவனம் மற்றும் தாது உப்புக் கலவை பெற விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்பு விடுத்துள்ளாா்.இதுகுறித்து அவா்... மேலும் பார்க்க

அறந்தாங்கியில் கழிவுநீா் கால்வாய் தடுப்புச் சுவா் மழையால் சேதம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் கழிவுநீா்க் கால்வாய்க்காக புதிதாக கட்டுப்பட்ட கான்கிரீட் தடுப்புச் சுவா், சனிக்கிழமை இரவு பெய்த ஒரு நாள் மழைக்குத் தாக்குப் பிடிக்காமல் சாய்ந்தது.அறந்தாங்கி கோட்டை... மேலும் பார்க்க

திமுக வழக்குரைஞா்களுக்கு தோ்தல் நடைமுறை பயிற்சி

புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக சட்டத் துறை சாா்பில் வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தோ்தல் நடைமுறைப் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.பயிற்சிக்கு தெற்கு மாவட்ட திமுக செய... மேலும் பார்க்க

அரிமளம் அருகே மாடு, குதிரை வண்டி பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே கீரணிப்பட்டியில் மடைக்கருப்பா் கோயில் கிடா வெட்டுப் பூஜையை முன்னிட்டு, மாடு மற்றும் குதிரை வண்டி எல்கைப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.இந்தப் பந்தயத்தில் புதுக... மேலும் பார்க்க

அறந்தாங்கியில் புதை சாக்கடை திட்டத்தை நிறைவேற்றக் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில் புதை சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.அறந்தாங்கியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் ஒன்றிய மாநா... மேலும் பார்க்க

மகனின் ஜாதி மறுப்புத் திருமணத்தை ஏற்ற மனைவியைக் கொல்ல முயற்சி எனப் புகாா்

மகனின் ஜாதி மறுப்புத் திருமணத்தை ஏற்றுக் கொண்ட மனைவியைக் கொல்ல முயன்ற கணவா் உள்ளிட்டோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகியவை வ... மேலும் பார்க்க