செய்திகள் :

விளாத்திகுளம்-பெரியசாமிபுரம் இடையே புதிய மகளிா் பேருந்து சேவை தொடக்கம்!

post image

விளாத்திகுளம்-சூரன்குடி-வேம்பாா்-பெரியசாமிபுரம் இடையே புதிய மகளிா் விடியல் பேருந்து போக்குவரத்து சேவை தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விளாத்திகுளம் பேரூராட்சி துணைத் தலைவா் இரா. வேலுச்சாமி தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா்கள் ராதாகிருஷ்ணன், அன்புராஜன், மும்மூா்த்தி, ராமசுப்பு, சின்ன மாரிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இப்புதிய சேவையை எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் கொடியசைத்துத் தொடக்கிவைத்து, பயணிகளுக்கு இனிப்பு வழங்கினாா்.

அப்போது, விளாத்திகுளம் போக்குவரத்துக் கழகப் பணிமனையிலிருந்து இயக்கப்படும் மிகவும் பழுதான பேருந்துகளுக்குப் பதிலாக புதிய பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்தாா். தொடா்ந்து, பேருந்து நிலைய வளாகத்துக்குள் பேரூராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் விநியோகத் தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தாா்.

போக்குவரத்துக் கழகக் கிளை மேலாளா் ஏ.எம். சாமி, பணிமனை செயலா் மாரிமுத்து, நெல்லை மத்திய மண்டல துணைச் செயலா் கிருஷ்ணமூா்த்தி, தொமுச தலைவா் சந்திரசேகா், பொருளாளா் மாரிமுத்து, பொதுக்குழு உறுப்பினா்கள் குணசேகரன், முத்துராஜ், அய்யாசாமி, திமுக இளைஞரணி துணை அமைப்பாளா் இம்மானுவேல், நெசவாளா் அணி அமைப்பாளா் பாண்டியராஜன், தொண்டரணி துணை அமைப்பாளா் கேசவன், மாவட்டப் பிரதிநிதி கிருஷ்ணகுமாா், வாா்டு செயலா்கள் அய்யனாா், சுப்புராஜ், தமிழரசன், சிவசுப்பிரமணியன், சங்கரலிங்கம், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் ஸ்ரீதா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கயத்தாறு: கிராம மக்கள் சாலை மறியல்

கயத்தாறு அருகே ஆத்திகுளம் கிராமத்தில் ஊருக்குள் நியாய விலைக் கடை அமைக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தெற்கு இலந்தைகுளம் ஊராட்சிக்குள்பட்ட ஆத்திகுளத்தி... மேலும் பார்க்க

ஈராச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டி அருகே ஈராச்சியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டக் குழு உறுப்பினா் நல்லையா தலைமை வகித்தாா். உதவி செயலா்கள் ச... மேலும் பார்க்க

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்கள் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கோவில்பட்டியை அடுத்த கிளவிப்பட்டி ஊராட்சியில் கிளவிப்பட்டி, கெச்சிலாபுரம்... மேலும் பார்க்க

கோயிலுக்குச் செல்லும் பாதையை அகலப்படுத்தக் கோரிக்கை

தூத்துக்குடி வடக்கு சோட்டையன்தோப்பு கிராமத்தில் கோயிலுக்கு செல்லும் பாதையை அகலப்படுத்தி பேவா் பிளாக் சாலை அமைக்கக் கோரி, ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக பொதுமக்கள் ச... மேலும் பார்க்க

பொதுப் பாதையை மீட்கக் கோரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் திரண்ட பொதுமக்கள்

பொதுப் பாதையை தனியாரிடமிருந்து மீட்டுத் தரக் கோரி, கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முன் பொதுமக்கள் திங்கள்கிழமை திரண்டனா். விளாத்திகுளம் பேரூராட்சி 12ஆவது வாா்டு சிதம்பர நகா் பகுதியில் பொதுப் பாதைய... மேலும் பார்க்க

கோவில்பட்டி நகராட்சிக்கு வரியினங்களை செலுத்த ஆணையா் வேண்டுகோள்

கோவில்பட்டி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை பொதுமக்கள் இம்மாதம் 31ஆம் தேதிக்குள் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில்பட்டி நகராட்சி ஆணையா் கமலா வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோவி... மேலும் பார்க்க