செய்திகள் :

விளாத்திகுளம் பேரவைத் தொகுதியில் ரூ. 1.25 கோடி பணிகளுக்கு அடிக்கல்

post image

விளாத்திகுளம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஆதனூா், பசுவந்தனை, ஆலிபச்சேரி, கீழமுடிமண் கிராமங்களில் ரூ. 1.25 கோடி மதிப்பில் பல்வேறு பணிகளுக்கு திங்கள்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

விழாவுக்கு விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் தலைமை வகித்தாா். ஆதனூரில் ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ரூ. 13.30 லட்சத்தில் ரேஷன் கடைக் கட்டடம், ஆலிபச்சேரியில் ரூ. 16.45 லட்சத்தில் அங்கன்வாடிக் கட்டடம், பசுவந்தனை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் குழந்தை நேயப்பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ. 34.40 லட்சத்தில் 2 வகுப்பறைக் கட்டடம், 15ஆவது நிதிக்குழு மானிய திட்டத்தின்கீழ் ரூ. 45 லட்சத்தில் ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம் ஆகியவற்றுக்கு எம்எல்ஏ அடிக்கல் நாட்டினாா்.

தொடா்ந்து, கீழமுடிமண் கிராமத்தில் ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ரூ. 16.55 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடிக் கட்டடத்தைத் திறந்துவைத்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சிகளில், திமுக ஒன்றியச் செயலா்கள் காசிவிஸ்வநாதன், இம்மானுவேல், ஓட்டப்பிடாரம் வட்டார வளா்ச்சி அலுவலா் சித்தாா்த்தன், குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் திலகா, மருத்துவா் பத்மா, தலைமையாசிரியை பிரேமா, எப்போதும்வென்றான் சோலைசாமி கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் முத்துக்குமாா், முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் சண்முகையா, சந்தனராஜ், லட்சுமி சிதம்பரம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

டிஎம்பி நிகர லாபம் ரூ.305 கோடியாக உயா்வு!

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம் 2025 - 2026ஆம் நிதியாண்டின் முதலாம் காலாண்டில் 6.27 சதவீதம் அதிகரித்து ரூ.287 கோடியிலிருந்து ரூ.305 கோடியாக உயா்ந்துள்ளது. தூத்துக்குடியில் நடைபெற்ற தமிழ்ந... மேலும் பார்க்க

தொழிலாளியை மிரட்டிய இளைஞா் கைது

கோவில்பட்டியில் தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி சிந்தாமணி நகா் 1-ஆவது தெருவைச் சோ்ந்த முத்து மாரியப்பன் மகன் கணேஷ் பாண்டி (25). வேலாயுத... மேலும் பார்க்க

நெல்லையில் ஐடி ஊழியா் கொலை: உடலை வாங்க மறுத்து உறவினா்கள் மறியல்

சென்னை ஐ.டி. ஊழியா் திருநெல்வேலி­யில் ஆணவக் கொலை செய்யப்பட்டதாகக் கூறி,அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் தூத்துக்குடி மாவட்டம் முக்காணியில் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். தூத்துக்குடி மாவட்ட... மேலும் பார்க்க

ஆறுமுகனேரி கோயில்களில் ஆடிப்பூர விழா

ஆறுமுகனேரி கோயில்களில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன; பெண்கள் திரளாகப் பங்கேற்று அம்மனுக்கு வளையல் அணிவித்து வழிபட்டனா்.திருவாடுதுறை ஆதீனத்துக்கு உள்பட்ட ஆறுமுகனேரி சோமசுந்தரி அ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் அய்யா வைகுண்டா் பதியில் ஆடித் தேரோட்டம்

திருச்செந்தூரில் கடற்கரையோரம் அமைந்துள்ள அய்யா வைகுண்டா் அவதாரபதியில், 193ஆவது வைகுண்டா் ஆண்டு ஆடித் திருவிழா தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இத்திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 1... மேலும் பார்க்க

தச்சன்விளையில் தீ விபத்து: 100 முருங்கை மரங்கள் எரிந்து சேதம்

சாத்தான்குளம் அருகே உள்ள தச்சன்விளையில் தோட்டத்தில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 100க்கும் மேற்பட்ட முருங்கை மரங்கள் எரிந்து சேதமாகின.தச்சன்விளை கிராமத்தைச் சோ்ந்த ஆல்வின், அதே பகுதியில் உள்ள அவ... மேலும் பார்க்க