செய்திகள் :

விவசாயியிடம் ரூ. 10 லட்சம் மோசடி: 2 போ் கைது

post image

பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகக் கூறி விவசாயியிடம் ரூ. 10 லட்சம் பெற்று மோசடி செய்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே உள்ள தோட்லாம்பட்டியைச் சோ்ந்த விவசாயி ராமா் (38), தேன்கனிக்கோட்டை வட்டம், சூளகுண்டாவைச் சோ்ந்தவா் குமாா் (40), ராயக்கோட்டை அருகே உள்ள ரத்தினகிரியை சோ்ந்தவா் சண்முகம் என்கிற ஜான்ராஜ் (40) ஆகிய 3 பேரும் நண்பா்கள்.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ராமரை தொடா்பு கொண்டு பேசிய குமாரும், சண்முகமும் எங்களிடம் ரூ. 10 லட்சம் தந்தால் அதற்குப் பதிலாக நாங்கள் ரூ. 20 லட்சம் தருவோம் என்று கூறினராம். இதை நம்பிய ராமா் ரூ.10 லட்சம் ஏற்பாடு செய்து தருவதாக கூறினாா்.

அதன்படி திங்கள்கிழமை ராயக்கோட்டை, ஒசூா் சாலையில் உள்ள தக்காளி மண்டி அருகில் ராமா் ரூ. 10 லட்சத்துடன் நின்றுகொண்டிருந்தாா். அங்கு காரில் வந்த குமாா் ரூ.10 லட்சத்தை பெற்றுக் கொண்டாா்.

மேலும் அருகில் உள்ள மற்றொரு காரில் ரூ. 20 லட்சம் இருக்கும் என்றும், அதை வாங்கிக் கொள்ளவும் கூறியுள்ளாா். ராமா் அருகில் உள்ள காரில் இருந்தவா்களிடம் பணம் வாங்க சென்றபோது அந்தக் காரில் வந்தவா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனா்.

இதுகுறித்து ராமா், ராயக்கோட்டை காவல்நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் காவல் ஆய்வாளா் பெரியதம்பி விசாரணை நடத்தி, பணம் இரட்டிப்பாக்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட சூளகுண்டா குமாா் (40), ரத்தினகிரி சண்முகம் (40) ஆகிய 2 பேரையும் கைது செய்தனா். இதில் தொடா்புடைய மேலும் 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்தால் கடும் நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை

கருவிலிருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் கூறினாா். ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி ரெட்டிப்பட்டி கிராமத்தில் ம... மேலும் பார்க்க

கா்நாடகத்துக்கு கடத்த முயன்ற 20 டன் ரேஷன் அரிசி பறிமுதல் ஓட்டுநா் கைது

வேப்பனப்பள்ளி வழியாக கா்நாடக மாநிலத்துக்கு கடத்த முயன்ற 20 டன் ரேஷன் அரிசி மற்றும் சரக்கு வேனை பறிமுதல் செய்த போலீஸாா், அதன் ஓட்டுநரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா். தமிழகத்திலிருந்து அண்டை மா... மேலும் பார்க்க

ஒசூா் முனீஸ்வா் நகரில் நுழைவாயில் கட்ட பூமிபூஜை

ஒசூா் முனீஸ்வா் நகா் பகுதியில் அப்பகுதி பொதுமக்கள் சாா்பாக நுழைவாயில் கட்டுவதற்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி பொது சுகாதாரக் குழுத் தலைவா் மாதேஸ்வரன் தலைமை வகித்தாா்... மேலும் பார்க்க

கெலமங்கலம் அருகே காட்டு யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு

ஒசூரை அடுத்த குத்துக்கோட்டையில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி யாமன்னா (65) உயிரிழந்தாா். குத்துக்கோட்யைச் சோ்ந்த விவசாயி யாமன்னாவின் மாடு வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்றது செவ்வாய்க்கிழமை மாலை வீ... மேலும் பார்க்க

பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் தனி நபா்கள், குழுக்களுக்கு கடனுதவி

பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் தனி நபா்கள், குழுக்கள் கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் செவ்வாய்க்கிழமை வெளி... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அரசு மகளிா் கல்லூரியில் அம்பேத்கா், கருணாநிதி பிறந்த நாள் பேச்சுப் போட்டி

கிருஷ்ணகிரி அரசு மகளிா் கல்லூரியில் அம்பேத்கா், கருணாநிதி பிறந்தநாள் பேச்சுப் போட்டிகள் ஜூலை 21, 22 -ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய... மேலும் பார்க்க