செய்திகள் :

விவசாய கிணற்றில் விழுந்த காட்டு யானை பலி

post image

கோவை சோலைப்படுகை பகுதியில் விவசாய கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த காட்டு யானையை போளுவாம்பட்டி வனத்துறையினர் மீட்டனர்.

கோவை மாவட்டம் சாடிவயல் அடுத்த சோலைப்படுகை பகுதியில் புதன்கிழமை நள்ளிரவு வனப்பகுதியிலிருந்து வெளியே வந்த காட்டு யானைகள் அங்குள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்தது. இதனைக் கண்ட விவசாயிகள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலை அடுத்து விரைந்து வந்த வனத்துறையினர் யானைகளை வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், இரண்டு யானைகள் வனத்திற்குள் சென்ற நிலையில் ஒரு யானை மட்டும் வழி தெரியாமல் நிர்மலா என்பவருக்கு சொந்தமான 20 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் விழுந்தது.

விவசாய கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்த காட்டு யானை.

அந்த கிணற்றில் அதிகயளவில் நீர் இருந்ததால் யானை நீரில் மூழ்கி உயிரிழந்தது.

இதையடுத்து யானையை மீட்பதற்காக பொக்லைன் கனரக வாகனம் கொண்டுவரப்பட்டு மீட்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினரின் சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் காட்டு யானையின் உடல் மீட்கப்பட்டு உடல்கூறாய்வுக்காக கோவை குற்றாலத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

உயிரிழந்த யானைக்கு சுமார் 35 வயது இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

விவசாய கிணற்றில் விழுந்து காட்டு யானை உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

The Poluvampatti Forest Department rescued a wild elephant that had fallen into an agricultural well in the Coimbatore Solaipadugai area and died.

டிரம்ப் வரிவிதிப்பால் எந்தெந்த துறைகளுக்கு பாதிப்பு?

இந்திய பொருள்கள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ள 25 சதவிகித வரி விதிப்பால் பல்வேறு துறைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்திய பொருள்கள் மீது வரும் ஆகஸ்ட் 1 முதல் 25 சதவிகித வரி மற்ற... மேலும் பார்க்க

முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் சந்திப்பா? - ராமதாஸ் பதில்!

முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்திக்கவிருப்பதாக வெளியான தகவல் பற்றி பாமக நிறுவனர் ராமதாஸ் பதில் அளித்துள்ளார். முதல்வர் மு.க. ஸ்டாலின் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற... மேலும் பார்க்க

கேளிக்கை பூங்காவில் சவாரியின் போது இரண்டாக உடைந்து விழுந்த ராட்டினம்: 23 பேர் காயம்

சவுதி அரேபியாவில் கேளிக்கை பூங்காவில் சவாரியின் போது ராட்டினம் ஒன்று இரண்டாக உடைந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் காயமடைந்ததாகவும், 3 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சவுதி... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெள்ளிக்கிழமை வினாடிக்கு 20,500 கன அடியாக சரிந்தது.காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த மழை தணிந்ததால் வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வின... மேலும் பார்க்க

மோடியும் டிரம்பும் இணைந்து கூறிய நட்பு என்னவாயிற்று?: ப.சிதம்பரம் கேள்வி

மோடியும் டிரம்பும் இணைந்து கூறிய நட்பு என்னவாயிற்று என முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் ம... மேலும் பார்க்க

மோடி-டிரம்ப் நட்புக்கு அர்த்தம் இல்லை: காங்கிரஸ் விமரிசனம்

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதிமுதல் 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், மோடி-டிரம்ப் நட்புக்கு அர்த்தம் ... மேலும் பார்க்க