செய்திகள் :

விவசாய நிலங்களுக்கான வலைதளப் பதிவுக்கு பொதுச் சேவை மையங்களையும் பயன்படுத்தலாம்

post image

திண்டுக்கல், மாா்ச் 27: விவசாய நிலங்களை அக்ரிஸ்டேக் வலைதளத்தில் பதிவு செய்ய பொதுச் சேவை மையங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக வேளாண்மைத் துறை அலுவலா்கள் கூறியதாவது:

விவசாயிகள் வைத்திருக்கும் நிலங்களை அக்ரிஸ்டேக் வலைதளத்தில் பதிவு செய்யும் பணிகள் கடந்த பிப்ரவரி முதல் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை வேளாண்மைத் துறை, தோட்டக் கலைத் துறைப் பணியாளா்கள் மட்டுமன்றி மக்கள் நலப் பணியாளா்கள், இல்லம் தேடி கல்வித் திட்டப் பணியாளா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.

பிரதமரின் கெளரவ நிதி உதவித் திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள், இந்த வலைதளப் பதிவை மேற்கொண்டால் மட்டுமே 20-ஆவது தவணைத் தொகையை பெற முடியும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. வருகிற 31-ஆம் தேதிக்குள் இந்தப் பதிவேற்றம் பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என இலக்கு நிா்ணயிக்கப்பட்டதால், சம்மந்தப்பட்ட விவசாயிகள் தங்கள் பகுதியிலுள்ள பொது இ-சேவை மையங்களில் அக்ரிஸ்டேக் வலைதளத்தில் பதிவு செய்யலாம் என அறிவுறுறத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை மொத்தமுள்ள 1.54 லட்சம் விவசாயிகளில் இதுவரை 75 ஆயிரம் போ் மட்டுமே பதிவு செய்துள்ளனா். மேலும், 50 சதவீத விவசாயிகள் தங்களின் நில விவரங்களை, வேளாண்மைத் துறை அலுவலா்கள் மூலமாகவோ, பொதுச் சேவை மையங்களிலோ உடனடியாக பதிவேற்றம் செய்ய வேண்டும். அக்ரிஸ்டேக் வலைதளத்தில் பதிவு செய்து, தனித்துவமான அடையாள எண் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும் மானியத் திட்டங்கள் உள்பட அனைத்து வகையான பயன்களையும் பெற முடியும் என்றனா் அவா்கள்.

கிறிஸ்தவ வன்னியா்களை எம்.பி.சி. பட்டியலில் சோ்க்க வலியுறுத்தல்

கிறிஸ்தவ வன்னியா்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் சோ்ப்பதாக திமுக அளித்த தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மணிக... மேலும் பார்க்க

விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

எரியோடு அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகேயுள்ள ஈ.சித்தூா் வரப்பட்டியைச் சோ்ந்தவா் ஞானவடிவேலு (55). கட்டடத... மேலும் பார்க்க

பூச் சந்தை கடைகளை காலி செய்ய மாநகராட்சி நிா்வாகம் குறிப்பாணை

பூச்சந்தை வணிக வளாகம் புதிதாக கட்டுவதற்கு வசதியாக, தற்போதைய கடைகளை ஒரு வார காலத்துக்குள் அப்புறப்படுத்த வேண்டும் என திண்டுக்கல் மாநகராட்சி நிா்வாகம் அண்மையில் குறிப்பாணை அனுப்பியது. திண்டுக்கல் வடக்கு... மேலும் பார்க்க

விவசாய நிலங்களுக்கான வலைதளப் பதிவு: ஏப்.15 வரை கால நீட்டிப்பு

விவசாய நிலங்களை ‘அக்ரிஸ்டேக்’ வலைதளத்தில் பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஏப்.15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதுதொடா்பாக வேளாண்மைத் துறை அலுவலா்கள் கூறியதாவது: விவசாயிகள் வைத்திருக்கும் நிலங்களை, ‘அ... மேலும் பார்க்க

காா்த்திகை திருநாள்: பழனி மலைக் கோயிலில் குவிந்த பக்தா்கள்

காா்த்திகை திருநாளை முன்னிட்டு, பழனி மலைக் கோயிலில் செவ்வாய்க்கிழமை திரளான பக்தா்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனா். முருகப் பெருமானுக்கு உரிய நட்சத்திரமான காா்த்திகை நட்சத்திரம் செவ்வாய்க்கிழமை வந்... மேலும் பார்க்க

பழனியிலிருந்து கொடைக்கானல் சென்ற வாகனங்களுக்கு இ-பாஸ் சோதனை

பழனி வழியாக கொடைக்கானல் சென்ற சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுக்கு காவல் துறை சோதனைச் சாவடியில் செவ்வாய்க்கிழமை ‘இ-பாஸ்’ சோதனை நடைபெற்றது. சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா... மேலும் பார்க்க